Tags :மின்னல்

ஸ்டெதஸ்கோப்

மிக மோசமாக மாசடைந்த டெல்லியில், இந்த `ஆக்ஸிஜன் பார்` உங்களுக்கு சுத்தமான காற்றை

மழைக்காலமாக இருப்பதால், வெப்பநிலை குறைவாக இருக்கிறது என்றும், காற்று வீசும் திசையில் மாறுபாடுகள் இருப்பதால், ஆங்காங்கே மாசுபாடு புகைமூட்டமாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தபோதும், டெல்லியில் உள்ள மாசுபாடு நிலை, சில ஆண்டுகளில் சென்னை நகரத்திற்கும் ஏற்படுமா என சென்னைவாசிகள் பலரையும் யோசிக்கவைத்துள்ளது. ”அண்டை மாநிலங்களில் விவசாய நிலங்களில் கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. சென்னையில் உள்ள பிரச்னையை டெல்லியில் உள்ள பிரச்னையோடு ஒப்பிட்டு பார்க்கமுடியாது. சென்னை நகரத்தில் புதிய கட்டுமானங்கள் […]Read More

கைத்தடி குட்டு

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – தி​ரைவிமர்சனம்

ஒரு பெரிய ஜோசியர் கிட்ட என் கைய நீட்டி கேட்டேன். நான் 90 வயசு வர வாழ்வன்னு சொன்னான். இப்ப நான் செத்துட்டண்ணா என் பணம் எனக்கு திரும்ப வேணும். இல்ல ஜோசியக்காரன தேடி சாவடிப்பன்” என்று ஆரம்பக் காட்சியிலேயே துப்பாக்கி முனையில் தொடங்கும் வாய்ஸ் ஓவர் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது. காட்சி வழி கதை சொல்லலை மட்டுமே விரும்பும் புதிய அலை இயக்குனர்கள் மத்தியில் கவுதம் மேனன் Voice Over Narrativeவை க்ரிஸ்பாக கையாண்டிருக்கிறார். தனுஷுக்கு […]Read More

முக்கிய செய்திகள்

ஐ.டி ரெய்டு: அதிகாரிகளுக்கு பயந்து சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்

ஐ.டி ரெய்டு: அதிகாரிகளுக்கு பயந்து சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள் மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ஊழியர்கள் பணக்கட்டுக்களை சாலையில் விசியெறிந்தனர். கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற  தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை […]Read More

முக்கிய செய்திகள்

காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற கர்ப்பிணி பெண்ணை வேட்டை நாய்கள் கடித்துக் குதறியதால் அவர்

நாய்குட்டிகளை வைத்து கொஞ்சும் படி புகைப்படம் எடுத்து வெளியிடுவது நம்மூர் நடிகைகளின் வழக்கம். இரண்டுமூன்று தினங்களுக்கு முன்பு கூட திருச்சியில் ஒரு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்து விட அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று அதைக் கடித்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றியதால் அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகிவிட்டிருந்ததை செய்திகளில் பார்த்தோம். ஆனால், இதோ பிரான்சில் நடந்த ஒரு சம்பவம் வெகு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.Read More

அண்மை செய்திகள்

சிதம்பரம்​கோவிலில்தீட்சதரால்தாக்கப்பட்டபக்தர்

சிதம்பரம் நகரின் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் லதா (51). இவர் சனிக்கிழமையன்று தன்னுடைய மகன் ராஜேஷின் பிறந்த நாளை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யச் சென்றார். அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சந்நிதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்கான பொருட்களைக் கொடுத்திருக்கிறார். லதா, தன் மகனுடைய பெயர், நட்சத்திரம் ஆகிய விவரங்களைத் தெரிவிப்பதற்குள் அர்ச்சனையை முடித்துவிட்டதாக, பொருட்களைத் திரும்பத் தந்திருக்கிறார் தர்ஷன். “இதனால், எந்த விவரத்தையும் கேட்காமல், […]Read More

முக்கிய செய்திகள்

மீண்டும் உயிர்பலி பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியில் 15வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் பின்புறம் காட்டுப் பகுதியில் இயற்கை உபாதைக்காக செல்ல சற்று நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கலவரமடைந்து போக, ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் சிறுமியைப் பார்த்த பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவள் […]Read More

அண்மை செய்திகள்

மரணதண்ட​​னை உறுதி ​செய்யப்பட்டது ​கோ​வை சிறுவர்கள் ​கொ​லைவழக்கில்

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(11), சிறுவன் ரித்திக்(8) ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர். இதில், போலீசாரிடம் இருந்து தப்பியோடியபோது, மோகன்ராஜ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் […]Read More

பாப்கார்ன்

சென்னை வேளச்சேரியில் திடீரென வீட்டிலுள்ள 3 கதவுகள் வெடித்துச் சிதறிய

சென்னை வேளச்சேரியில் திடீரென வீட்டிலுள்ள 3 கதவுகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாரிமுத்து என்பவர் வீட்டின் சமையலறை, படுக்கையறை மற்றும் முன்பக்க கதவு என மூன்றும் தீப்பிடிக்காமலேயே திடீரென வெடித்துச் சிதறின. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத்துறையினர், இதுகுறித்து தடயவியல் வல்லுநர்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் வீட்டை ஆய்வு செய்தபின் அங்கும் யாரும் தங்க வேண்டாம் என அறிவுறுத்தினர். வீட்டில் அரை மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீரை சுட வைத்ததாக தெரிகிறது. […]Read More

பாப்கார்ன்

344 வயதான அலக்பா ஆமை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது!

344 வயதான அலக்பா ஆமை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது! ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும், 344 வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது. தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, அலக்பா எனும் இந்த பெண் ஆமை மிகவும் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வந்தது. ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே இரண்டு வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பாதுகாத்துவந்தனர். ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், […]Read More

பாப்கார்ன்

ஆயுதபூஜை கொண்டாட ஏ.டி.எம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய காவலாளி!

ஆண்டுக்கொரு முறை குழந்தைகளின் குட்டி சைக்கிள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் கார், பைக் வரை மனிதனின் வாழ்வில் உயர்வுக்கு உதவும் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, மாலை அணிவித்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிற்கூடங்களிலும், அலுவலகங்களிலும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை தண்ணீர் ஊற்றி கழுவிய நகைச்சுவையான சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் – பெருந்துறை சாலையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணியாற்றி வந்த காவலாளி ஆயுதபூஜையை முன்னிட்டு […]Read More