இன்றைய ராசி பலன்கள் ( 27 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( 27 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 27ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 27.04.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.33 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று அதிகாலை 03.01 வரை அனுஷம். பின்னர் கேட்டை. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். பணவரவு இருக்கும் என்றாலும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் சிலருக்கு ஏற்படும். இன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய வேலைகளை நாளைக்கு என்று ஒத்திவைக்காமல் இன்றே முடித்துவிடுவது நல்லது. தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகை யில் சிறுசிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே வாக்கு வாதம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். முயற்சிகளும் வெற்றியாகும். என்றாலும் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்தவும். தட்சிணா மூர்த்தியை வழிபட, தடைகள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண் டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். அம்பிகையை வழிபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேங்கடேச பெருமாளை வழிபட, நன்மைகள் கூடுதலாகும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். விநாயகப்பெருமானை வழிபடுவ தன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் கவனம் தேவை. தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். அதற்கான பணவரவும் கிடைக்கும். தாய் மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். பைரவரை வழிபடுவதன் மூலம் முயற்சிகள் சாதகமாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன்பு ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மகர ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர் கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். அம்பிகையை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்குக் குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இடையூறுகள் விலகும்.

மீனராசி அன்பர்களே!

பணிச்சுமை அதிகரிக்கும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...