ஐ.டி ரெய்டு: அதிகாரிகளுக்கு பயந்து சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்

ஐ.டி ரெய்டு: அதிகாரிகளுக்கு பயந்து சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்

மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ஊழியர்கள் பணக்கட்டுக்களை சாலையில் விசியெறிந்தனர்.

கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற  தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை 6வது மாடியில் இருந்து வீசியெறிந்தனர். கட்டுக் கட்டாகவும், கொத்துக் கொத்தாகவும் வந்து விழுந்த பணத்தைக் கண்ட பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர். ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!