தமிழா தமிழா தமிழ்மொழி அமுதாம் … தடையைத் தகர்ப்பாய் தமிழினில் பேச! தமிழின் சிறப்புத் தானறிந் தாயோ … தமிழில் பேசத் தயக்கமேன் தோழா? சங்கம் வளர்த்தத் தமிழ்மொழி என்பர் …..சாலச் சிறந்து விளங்கிடும் மொழியே எங்கும் எளிதாய்ப் பரவிடும் இனிதாய் ….எங்கள் மொழியாம் எழிலுடைத் தமிழே! கண்டோம் குறளாய் காப்பியம் பலவாய் ….கவியும் நடையும் கரையிலை மொழிக்கு பண்ணோ பாட்டோ பழகுதல் தமிழால் …பாடம் இனிமை படிபடி இன்னும் அறிவாய் தெளிவாய் அழகுறப் பேசு …அன்னை […]Read More
ரயில் கடந்து செல்லும் போதெல்லாம் கேட் அருகே நின்று கொண்டு கையசைத்து கையசைத்து சந்தோஷமாய் கத்தியது நினைவிலே வந்து போகிறது.. சிக்னலில் நின்று கிளம்பிய ரயிலின் துணை ஓட்டுனராய் கொடியசைத்துக் கொண்டே கேட்டை கடக்கும்போது பார்க்கிறேன் கையசைக்க ஆளில்லை.. நின்று கொண்டு இருந்த காரில் தூங்காத குழந்தையின் கையிலும் செல்போன்.. எல்லோரும் தலைகுனிந்து ஏதோ ஒன்றை தேடியபடி.. இவர்கள் தலை நிமிரும் பாடலைப் பாட எட்டையபுரத்தார் வருவாரா…Read More
உயிருக்குள் உயிர் உருவாகி, வலியின் உச்சத்தில் ஜனித்து, “குவா குவா” இசையில் வலியை மீறிய மகிழ்வின் புன்னகை தாய்மை; தன் உதிரம் உயிராய் கண்முன் உருவாகி உயிர்தொடும் இதத்தின் எல்லையில் தந்தையின் தாய்மை; கண்ணாடி வளையல்கள் களிமண் பொம்மைகள் பறக்கும் ஏரோப்ளேன் அசையும் வாத்து த்த்தித்தாவும் நாய்க்குட்டி “கூ”வென்று ஓடும் இரயில் சண்டையிட்டு வாங்கிய சகோதரத்துவம்; இரத்த உறவில்லை “உன்னுயிர் துடித்தால் என்னுயிரும் துடிக்கும், நீயும் நானும் ஒன்று” என யாரிடமும் பேசாத அந்தரங்கள் பேசி உணர்ந்து, […]Read More
சிவப்பு சிக்னலின் நடுவே சிங்காரப் பெண்ணொருத்தி… வண்ணச் சரிகைச் சீலை .. சன்னல் வைத்த ரவிக்கை… உதட்டுச் சாயம்… மையெழுதிய அகலக் கண்கள் … கைதட்டிக் காசு கேட்கிறாள்… பிச்சையாய்த் தோன்றவில்லை… தந்ததும் தலையில் கைவைத்து புன்னகையுடன் வாழ்த்துகிறாள்… பொய்யெனத் தோன்றவில்லை…. பெற்று, விட்டவரினாலும் கூட இனங்காண முடியா பேரழகுக்காரி .. அவளுக்கென்று ஒரு இனம்… அவளுக்கு மட்டுமே ஒரு கடவுள் … அவளுக்கென ஓரிசை, நடனம்…. வழிபாடுகளில் மிஞ்ச முடியாத பெருமை வாய்ந்தது எம்மானுடம்… உயிரில்லா […]Read More
வலி தாங்கிஉயிர் தந்தாள்.. இமை தாங்கும் விழிகளாய்ஒளி தந்தாள்.. நதியோடும் அலை நடுவேவிளையாடும் நீர்க்குழிமியாய்நமை ஈன்று அன்பின் கடலானாள்.. நினைவில் அகலாத அவள் முகம்நிலத்தில் இருந்து அகன்றாலும்அகலாது அந்த நிலவு முகம்.. தன்னலம் காணா ஒரு மனம்..எந்தாளும் தளிரையே காணும் அந்த மரம்..களைத்து அலுத்தாலும் காட்டிக் கொள்ளாது.. கண்கள் உறங்கினாலும் அவள் கனவுகளிலும்பிள்ளையின் நினைவே பெரிதாய் தோன்றும்..மண்ணில் இருக்கும் வரை மதித்துப் போற்று….Read More
இரவைத் துவைத்துஈரம் சொட்டாமல்உலர்த்த வேண்டும்எப்போதாவது… சகட்டுமேனிக்குகனவுகள் முளைத்துகண்களை சங்கடத்திலாழ்த்துகிறது சொற்களில் மகரந்தப்பொடிஎப்படித்தான் ஒட்டிக் கொள்கிறதோபராபரமே… உறங்கா விரல்களின் வழியேபயணிக்கிறது காட்டுச் சிறுக்கியின்களவுக் காமம்.. மீன்களெல்லாம் தூண்டில்கள்தூண்டிலெல்லாம் மீன்கள்கரைகளற்ற கும்மிருட்டில்துள்ளிப் பாய்கின்றன.. இரவுக்கு ஒரு லாக்கர்இருந்தால் கூடஎப்போதும் நல்லது பகலில் திறக்கசாவியோடுவெளிச்சம் ஓட வரும் என்னவோமனதில் பட்டதுஇரகசியங்கள் புரளும்இரவைத் துவைத்துகாயப் போட்டால்நல்லது என்று..! குளியல் அகம் குளிப்பாட்டஒரு குளியலறைஎண்ணங்கனை தூய்மையாக்கஒரு மூலிகை சொல் ஆதிக்குளியலை காணாதிருக்கசின்ன தாழ்ப்பாள்மனம்விட்டு விசிலடித்தபடிசில்குளியல் அகத்தின் மலர்ச்சிக்குபுத்தாடைச் சிந்தனைபயணிக்கும் சொற்களுக்குநாகரிக நடைப்பயிற்சி வெல்லும் சொல் […]Read More
லாக்-டவுன்-6 முகக்கவசத்தின் உள்ளே ஒளிந்து கொள்ளும்வெறிச்சிட்ட வானம் மிகப்பெரியது.சுவாசத்தின் வெளியேகும்கரியமிலவாயு பரவிப் பரவிமேகமாய் அழுத்தம் கொண்டு மோதுமந்தமலைமுகட்டின் தரையெலாம்வெப்பம் பூக்கும்.பள்ளத்தாக்கில் இறங்கிதூறலாய் மாறாமல் ஈரமாயாகும்மென் குளிரில்பறந்து செல்லுமப் பறவைக்கூட்டம்அறிந்திருக்கிறதுஈரத்தின் மென்குளிரையும்இதமான இளஞ்சூட்டையும் லாக் டவுன் – 5 முகக்கவசம் அணிந்தபடிபேசிச் செல்பவர்கள்என்ன பேசுகிறார்கள்எனப் புரியவில்லை தொலைபேசியில் நண்பர்தெரிவித்த செய்தியோஇதுவரை யறியாததாய்இருக்கிறது தொலைக்காட்சியில்செய்தி வாசிப்போர்அண்மைச் செய்திகளுக்காகஆளாய்ப் பறக்கிறார்கள் சுகாதாரத்துறையின் அறிக்கைஇளவயது கற்றகூட்டல் கணக்குத் திறனைமீளப் புதுப்பிக்கிறது முடக்கம் செயலின்மையிலிருந்துவார்த்தைப் பிரயோகமாய்வடிவம் கொண்டு விட்டது தளர்வு புத்தெழுச்சிக்கு மாறாய்தளர்வைத் தருவதுதாங்கொணாத் […]Read More
தடியின் பிள்ளையே!தமிழைத் தாங்கிப் பிடித்தாய்!உன் கரகரத்த குரலில்ஓடி விளையாடியது தமிழ்! உன் பேச்சைக் கேட்கஇரவுப் பனியிலும்அமர்ந்திருந்தது கூட்டம்புது விடியல் காண! உதயசூரியனே!ஒரு கோடி கரங்களாகஉயர்ந்து கேட்டதுஉன் ஒற்றை விரல்! கட்டை மீசைகுடையாக நின்றதுதமிழ் உதிர்த்த இதழுக்கும்தமிழ் நாட்டிற்கும்! குட்டை உருவம்அமெரிக்காவையும் தொட்டதுஅதீத அறிவாற்றலால்! வெள்ளாடைசுயமரியாதை திருமணங்கள்நடத்தியதுவெள்ளை உள்ளத்தால்! காஞ்சிநூல் கொண்டுநெய்து தந்ததுஓர் பேரறிஞரை! நல்ல தம்பியை இயக்கியஎங்கள் அண்ணாவே!இலட்சம் நல்ல தம்பியர்நின்றனர்இலட்சியத்தோடுஉன் கை கோர்த்து! ஆதிக்க சக்திகளுக்கெதிராகதுடித்து எழுந்தாள்உன் ’வேலைக்காரி!’ பொடி போட்டுப் பேசியவரே!உன் பேச்சின் எழுச்சியில்தும்மி […]Read More
கரையின் மீதுஅலைக் கொண்ட தீராதகாதலை,முடிவற்றமுத்ததால்கரையை தீண்டும்அலைகள் போல,ஓயாமல் முத்தமிட்டுகொள்கின்றனநமது காதல் பயணங்களும்,நினைவுகளும்….. இளமைக் கால காதலில்,இறுக்கிப் பிடித்த கரங்களோடுநடைபோட்டகடற்கரையில்,கொஞ்சம் இதமாய் பிடித்து,மார்போடு அணைத்து,நினைவூட்டிக் கொள்கிறோம்,நம் இளமைக் காதலின்நினைவுகளை,நம் முதுமையில். இளமை கடந்து,முதுமை தொட்டு,நரை தட்டி போயினும்,முதல் பார்வையின் ஸ்பரிசமும்,முதல் அரவணைப்பின் துடிப்பும்,முதல் முத்தத்தின் இனிப்பும்,தலைகோதிய விரல்களின் இதமும்இன்றுவரை திளைத்துநிற்கிறது நம் காதலில். முதுமை எல்லையில் நாம் இருந்தும்,காதலில் இளமை இன்னும்முடியவில்லை போலும். ஆயுள் முடியும் முற்றத்திலும்,நம்மிடம்ஆனந்தம் திளைத்து,நிலைத்து போனது. ஆத்மார்த்தமான நம் காதலுக்குஆயுள் முடியஇன்னும் பல ஜென்மம்வேண்டுமடி… […]Read More
இந்த இரவுகளில் எல்லாம்அவன் தூங்குவதே இல்லை.தூங்காமல் கனவுக்காணும்அவன் அவனுக்கே நெடுந்துயரம் தான். அவன் இவ்வாறு கனவுகாண்பதை தன் பதினாறுவயதில் ஆரம்பித்திருந்தாலும் கூடமுப்பதைத் தாண்டியப் பிறகுதான் அந்த கனவுகளின் கொடூரம்அவன் அறிந்திருந்தான்.நிமிர்ந்தும் தூங்க முடியவில்லைசரிந்தும் தூங்க முடியவில்லை கமந்தும் தூங்க முடியவில்லைகனவுகள் கரப்பான்ப்பூச்சிகளைப் போல்அவனை குடைந்தெடுத்தன.இப்போதெல்லாம் இருக் கைகளும் அவனுக்குசலித்து பாரமாய் இருந்தன.நிம்மதியற்ற இரவுகள்நெடுந்தூரப் பயணத்தை ஒத்ததாய் முடிவறியாப் பாதையாய் சென்றது.இன்னும் சொல்வதானால்இரவுகளை விட பகல் தான்முற்றிலும் அவனுக்கான அமைதியைக் கொடுத்தது.“கனவுகளின்” தொல்லை இல்லை.வீடில்லை படிப்பில்லை வழுக்கைத்தலைசம்பளம் போதாதுநாத்தனார் […]Read More
- பிரடரிக் எங்கெல்ஸ்
- பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று
- காந்தாரா 2 படத்தின் மிரட்டலான.. ஃபர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- ஆக்ஷனில் மாஸ் காட்டும் கல்யாணி பிரியதர்ஷன்..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்
- திரைப்படத் துறையினர் “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்! | நா.சதீஸ்குமார்
- தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வங்கக்கடலில் உருவானது “மிக்ஜாம்” புயல்..! | நா.சதீஸ்குமார்
- செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு..! | நா.சதீஸ்குமார்
- வரலாற்றில் இன்று ( 28.11.2023 )
- இன்றைய ராசி பலன்கள் ( 28 நவம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )