ரூ.823 கோடியில் பிராட்வேயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

பிராட்வே பேருந்து நிலை​யத்​தில் ரூ.822.70 கோடி மதிப்​பீட்​டில் அனைத்து உட்​கட்​டமைப்பு வசதிகளுடன் புதி​தாக கட்​டப்​பட​வுள்ள பல்​நோக்கு ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​யம் மற்​றும் குறளகம் கட்​டு​மானப் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாநக​ராட்சி சார்​பில் பிராட்வே பேருந்து நிலை​யம் மற்​றும் தங்​க​சாலை பேருந்து நிலை​யம் அமைக்​கும் பணி​கள் 1960-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டு, 1964-ம் ஆண்டு மக்​கள் பயன்​பாட்​டுக்கு வந்​தன. பிராட்வே பேருந்து நிலை​யம் வெளியூர் செல்​லும் பேருந்​துகளுக்​காக இருந்த நிலை​யில், காலப்​போக்​கில் அங்கு பல்​வேறு கடைகள் அமைந்​தன.

சென்னை மாநகரின் முக்​கிய இடத்​தில் இப்​பேருந்து நிலை​யம் அமைந்​திருந்​த​தா​லும், மக்​கள் தொகை பெருக்​கத்​தா​லும், இடநெருக்​கடி​யால் வெளியூர் செல்​லும் பேருந்​துகள் 2002-ம் ஆண்டு நவம்​பரில் கோயம்​பேட்​டுக்கு மாற்​றப்​பட்​டன. இதன் பின் பிராட்வே பேருந்து நிலை​யம் மாநகரப் பேருந்​துகளுக்​கான நிலை​ய​மாக மாற்​றப்​பட்டு தற்​பொழுது பயன்​பாட்​டில் உள்​ளது.

பிராட்வே பேருந்து நிலை​யத்​தில் சிறுகடைகள் அதி​க​மாக உள்​ள​தா​லும், இடநெருக்​கடி​யாலும், இப்​பேருந்து நிலை​யத்தை நவீனப்​படுத்த ஏற்​க​னவே பல்​வேறு முயற்​சிகள் எடுக்​கப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில் 2022-23-ம் ஆண்​டுக்​கான நகராட்சி நிர்​வாகத் துறை மானியக் கோரிக்​கை​யில் பிராட்வே பஸ் நிலை​யத்​தில் பல்​நோக்கு ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​யம் அமைக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அந்த அறி​விப்​புக்​கிணங்க, ரூ.822.70 கோடி மதிப்​பில் பல்​நோக்கு ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​யம் மற்​றும் குறளகம் கட்​டிடம் (Multi Modal Facility Complex) கட்​டு​வதற்கு அரசாணை வெளி​யிடப்​பட்​டது. இதையடுத்து நேற்று இப்​பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார்.

சிறப்​பம்​சங்​கள்: இத்​திட்​டம் உயர் நீதி​மன்​றம் மெட்ரோ நிலை​யம், குறளகம் மற்​றும் எம்​ஆர்​டிஎஸ்​/புறநகர் ரயில் நிலை​யம் ஆகிய​வற்றை ஒருங்​கிணைக்​கும் ஒரு மைய​மாக திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இந்​தத் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக 9 தளங்​களைக் கொண்ட கட்​டிடம் மற்​றும் 10 தளங்​களைக் கொண்ட குறளகம் கட்​டிடம் ஆகியவை திட்​ட​மிடப்​பட்​டுள்​ளன.

இதில் 73 பேருந்​துகளை நிறுத்​தும் வசதி, பயணி​கள் கூடம், சில்​லறை வணிக தளங்​கள், அலு​வல​கப் பகு​தி​கள், இருசக்கர மற்​றும் நான்கு சக்கர வாக​னங்​களுக்​கான நிறுத்​து​மிடம் ஆகியவை இடம்​பெறும். 26,240 சதுர மீட்​டர் பரப்​பளவு உள்ள இடத்​தில் மொத்​தம் 1,36,580 ச.மீ. கட்​டிடம் கட்ட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, ஆர்​.எஸ்​.​ராஜ கண்​ணப்​பன், பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரியா மற்​றும் அரசு அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

ரூ.516 கோடி​யில் 19 பாலங்​கள்: சிஎம்​டிஏ சார்​பில் பெரம்​பூர் நெடுஞ்​சாலை​யில், ரூ.21.50 கோடி​யில் கட்​டப்​பட்ட அம்​பேத்​கர் திருமண மாளி​கையை முதல்​வர் ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​து, 10 ஜோடிகளுக்கு திரு​மணத்தை நடத்தி வைத்​தார்.

விழா​வில் பேசிய முதல்​வர், “சென்​னை​யின் கட்​டமைப்பு வசதி​யைப் பெருக்க வேண்​டும்; அதை நல்ல வகை​யில் உரு​வாக்க வேண்​டும் என்​ப​தில் அக்​கறை எடுத்​துக் கொண்டு அந்​தப் பணியை நிறைவேற்றி வரு​கிறோம்.

திமுக அரசு அமைந்த 5 ஆண்​டு​களில், வட சென்னை பகு​தி​யில், மேயர் சிட்​டி​பாபு பாலம், தென் சென்​னை​யில் தியாக​ராய நகர் ஆகாய நடை மேம்​பாலம், ஜெ.அன்​பழகன் மேம்​பாலம், வடசென்​னை​யில் செங்கை சிவம் பாலம் என்று ரூ.500 கோடி​யில் பல்​வேறு பாலங்​களை அமைத்​திருக்​கிறோம். ரூ.516 கோடி​யில் இன்​னும் 19 பாலங்​களை சென்னை மாநகரில் உரு​வாக்​கும் பணி​கள் நடை​பெறுகின்​றன” என்​றார்​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!