ஏகனாய் மனிதருள் அனேகனாய் கலந்த
படைத்தவனின் அகம் மகிழும் திருநாள்.
. விடிகின்ற நாட்களில் விடைத் தேடும்
வினாக்களை தனக்குள் ஒலிப்பிக்கும் பெருநாள்
.. ஐந்து முறையில் தொழுகை செய்யும்
அடியவர்களின் வாழ்வில் அனைத்தும் ஆனவன்.
. கையேந்தி வேண்டும் பிள்ளைகளின் பிழைகளை மறந்துக் காக்கின்ற பிறைநிலா வடிவானவன்.
. இல்லையென சொல் இல்லாதாக்கி
ஈகையின் வழியில் வாழ்வோர் வாழ்வை வசந்தமாக்கியவ
ன் அன்பு ஒன்றே மனிதத்தைக் காக்கின்ற அரணென
கற்பிக்கும் மார்க்கத்தின் தலைவனவன்.
. இறைவனின் வேண்டியவர்க்கும்
இறையருள் வேண்டுவோர்க்கும்
ஈகையின் புனிதத்தை இவ்வுலகிற்கு உணர்த்திய
ரமலான் பெருநாள் வாழ்த்துகள்

