“எழுத்து சேவை என்.சி.எம்மும்”

இன்விடேஷன் ஃப்ரூஃப பார்த்ததுமே நாங்க சந்தோஷப்பட்டது நெஜம்.ஏன்னா பல முக்கிய பிரமுகர்கள் மேடைல பேசறவங்க லிஸ்ட்ல இருந்ததால.

” என்ன இன்விடேஷன்..யார்லாம் சந்தோஷப்பட்டீங்க..?” னுதான கேட்கறீங்க.

எழுத்தாளரும் நண்பருமான NcMohandoss Ncm – ன் ரெண்டு புக் ரிலீஸ் பத்ன இன்விடேஷன்.சந்தோஷப்பட்டது ncm ன் பேனாக்கள் பேரவையை சேர்ந்த நிர்வாக குழுவினரான நாங்க.

யெஸ், அந்த நிகழ்ச்சி சென்ற ஞாயிறு ( ஏப்ரல் 20 ) மாலை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர் சங்க வளாகத்தின் திருவள்ளுவர் அரங்கத்தில நல்லபடியா நடந்து முடிஞ்சது.

மேடைல இருந்த பிரபலங்க  நாமகரணத்தலாம் இப்ப டைப் பண்ணா என்னோட கைவிரல் வலிக்க..

அதனால இந்த போஸ்ட்ல அட்டாச் பண்ணிருக்கற இன்விடேஷன பார்த்துக்கோங்க , pls.

நிகழ்ச்சி என்னன்னா..

பத்ரிகையாளர் ராணிமைந்தன் எழுதிய ‘ எழுத்துச் சேவை என்.சி.எம் ( வானதி பதிப்பகம் )

மற்றும் தாமரை பிரதர்ஸ் மீடியாவின் ‘ விசாலப் பார்வை ‘ ங்கற தலைப்ல என்.சி.மோகன்தாஸ் எழுதிய நாவல் – இந்த இரண்டு நூல் வெளியீட்டு விழா.

Ncm மற்றும் அவரது சகோதரர் ஜெயகுமாரின்  பேத்திகளான விவிகா & திக்‌ஷாவின் இறைவணக்க பாடலுடன் நிகழ்ச்சி அட்டகாசமாக துவங்க..

கலைமாமணி இணைப்புரை திலகம் சி.வி.சந்திரமோகன் அழகு தமிழில் நிகழ்ச்சிக்கு தொகுப்புரை வழங்க..

வரவேற்புரையை திரு.செந்தில்குமார் பன்னீர்செல்வம் ( IFL – Trust ) வழங்க..

விழா தலைமை ஏற்ற தனலஷ்மி குழும திரு. சீனிவாசன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் செய்து வரும் இலவச மருத்துவ சேவைகளை பற்றி  ncm சொன்னது கேட்பவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

திரு.நல்லி குப்புசாமி முன்னிலையில் நூல்கள் வெளியீடு சிறப்பாக நடக்க..

சிறப்பு விருந்தினரான திரு.இறையன்பு , எழுத்து சேவை என்.சி.எம் நூல் பத்தின ஆய்வுரையால் அரங்கத்தை கவர..

பேசிய மத்த பிரமுகர்கள் அனைவருமே Ncm ன் சேவை குணத்தை விவரித்து பேச..

இன்னொரு நூலான விசாலப் பார்வை பத்ன அறிமுக உரையை வழக்கம் போல ஸ்டாப் வாட்ச் இல்லாமலே தனக்கு கொடுக்கப்பட்டிருந்த நேரத்திற்குள் கச்சிதமாகவும் ஸ்வாரஸ்யமாகவும் பத்ரிகையாளர் திரு.லேனா பேசி கைதட்டல்களை அள்ள..

பிரமுகர்களின் உரைகளுக்கு இடையிடயே ncm , தனக்கும் பிரமுகர்களுக்குமான நட்பு தொடர்பு பற்றி விவரித்து பேசிவிட்டதால்..

ஏற்புரையாக ஏதும் பேசாமல் மேடையில் முட்டியிட்டு அரங்கத்தில் இருந்தோரை பார்த்து கை குவிக்க..

சபையோர் நெகிழ்ச்சியாக..

பார்வையாளர்கள் வரிசையிலும் ஏகத்துக்கு பிரபலங்க.

நிகழ்ச்சி தொகுப்பாளரான சந்திரமோகன் ,

” செவிக்கு உணவாக நிகழ்ச்சியை கண்டுகளித்த நமக்கு சுவையான  இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் உணவருந்தி விட்டு செல்லவும் ” னு அறிவிக்க..

அஸ்வின் ஸ்வீட்டுடன் இட்லி , ஆனியன் – பொடி தூவின சூடான ஊத்தப்பம் , ரவா பொங்கல் , சட்னி , சாம்பார், உருள சிப்ஸ் …

படு ஸாஃப்ட்டான இட்லியை வகையான சட்னி , சாம்பாருடன் லபக்கி , பொடி தடவி ஊறியிருந்த ஊத்தப்பத்தின் மேல் சாம்பாரை கொஞ்சமாக விட்டு சாப்ட்டப்றம் , தளர இருந்த சூடான ரவா பொங்கலை கிரிஸ்பான உருள சிப்ஸ் + சட்னியுடன் கபளீகரம் பண்ணி முடிச்சப்ப..

” சார்..தயிர் சாதமும் வத்தக்கொழம்பும் இருக்கு ” னு குரல் வர..

தாளிப்பு சாங்கியத்தோட இருந்த  தயிர் சாதத்த , மணத்தக்காளி + சின்ன வெங்காயம் போட்ட வத்தக்கொழம்ப ரெண்டு கரண்டி விட சொல்லி..

” ஆஹா ” னு ஆச்சர்யப்பட்டு அதையும் ஒருகை பார்த்து முடிச்ட்டு காலி பாக்கு மட்ட தட்டை டஸ்ட் பின்ல போடறச்ச..

” அங்க வாஷ்பேசின்ல கையலம்பிட்டு வாங்க.பாலும் இருக்கு ” னு குரல் வர..

கல்யாண வீட்டு உபச்சாரம் கெட்டது போங்க..!

சர்ரி , அதை ஏன் விடுவானேன்னு கப்புல குடுத்த பாலை வாங்..

ஸ்ஸ்..செம சூடான பால்.

குடிக்றச்ச ஏலவாசன மூக்கை துளைக்க..

Shankar Caterers ஷங்கருக்கு ஒரு சபாஷ் போட்ட கையோட..

இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சி + சுவையான டின்னரையும் குடுத்த Ncm குடும்பத்தார்க்கு தேங்க்ஸ் சொல்ட்டு அந்த ஸ்தலத்த விட்டு கிளம்பினேன் , Viji R Krishnan  மற்றும் Mohana Suhadev  தம்பதியரோட கார்ல.

படங்கள் : கலைமாமணி திரு.யோகா.

கட்டுரை : மடிப்பாக்கம் வெங்கட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!