Tags :கைத்தடி முசல்குட்டி

நகரில் இன்று

ஜம்முவில் அடுக்குமாடிக் கட்டடம் தரைமட்டமானது;

இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள்….       ஜம்மு: ஜம்முவில் மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குள் தீப்பிடித்த போது அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்ற போது திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.     கோல்புள்ளி பகுதியில் உள்ள கட்டடத்தின் தரை தளத்தில் இன்று காலை தீ விபத்து நேரிட்ட போது, எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததில், 5 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.     […]Read More

பாப்கார்ன்

காதலில் அனுஷ்கா, விரைவில் திருமணம்?:

அனுஷ்கா ஒருவரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.    நடிகை அனுஷ்காவுக்கு 38 வயதாகிவிட்டது. அவருக்கு விரைவில் திருமணம்  செய்து வைக்க பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். இதையடுத்து அவர்கள் கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அனுஷ்கா  கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.    அந்த வீரர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும், ரஞ்சி அணியில் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்கா அந்த கிரிக்கெட் வீரரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் […]Read More

நகரில் இன்று

குழந்தைகள் விற்ற வழக்கில் தாய் உள்பட இருவா் கைது..!!

   திருச்சி: திருச்சியில் இரு ஆண் குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் தாய் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.    திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் காமராஜா் தெருவைச் சோ்ந்த கோவிந்தன்- அஸ்வினி தம்பதிக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, பிறந்து 45 நாள்களே ஆன ருத்ரன் என்ற ஆண் குழந்தையை வளா்த்து வந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புகாா் வந்தது. அதைத் […]Read More

கோவில் சுற்றி

தைப்பூசம்:

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன்….   தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இன்று காலை முதலே முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெற்று வருகின்றது. Read More

அண்மை செய்திகள்

பாகிஸ்தானில் பயிற்சி ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது….

பாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி காயமடைந்தார்.     பாகிஸ்தானின் ஷார்கோட் மாவட்டம் அருகே ராணுவ பயிற்சி விமானம் இன்று திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் விமானி காயத்துடன் உயர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.  எனினும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. Read More

பாப்கார்ன்

இஸ்தான்புல் ஓடுபாதையில் விமானம் விழுந்து உடைந்தது:

இஸ்தான்புல் ஓடுபாதையில் விமானம் விழுந்து உடைந்தது: 3 பேர் பலி; 179 பேர் காயம்:     இஸ்தான்புல்: : துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட போது மோசமான வானிலை காரணமாக விமானம் கீழே விழுந்து, தீப்பிடித்து, மூன்று துண்டுகளாக உடைந்ததில் 3 பேர் பலியாகினர். 179 பேர் காயமடைந்தனர். உடைந்து விழுந்த விமானத்தின் ஓட்டைகள் வழியாக, அதில் பயணம் செய்த பயணிகள் வெளியே குதித்து ஓடி வரும் சில புகைப்படங்கள் துருக்கி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. போயிங் […]Read More

பாப்கார்ன்

நடிகர் யோகி பாபு திருமணம்….

நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை புதன்கிழமை மணந்தார்.   யோகி பாபுவின் குலதெய்வ கோயிலில் புதன்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.   திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் விதமாக சென்னையில் அடுத்த மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக யோகி பாபு தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Read More

அண்மை செய்திகள்

கரோனா வைரஸ்: சீனாவில் பலி 425 ஆக அதிகரிப்பு….

   சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20,400 போ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.     கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வூஹான் நகரில் பத்தே நாள்களில் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் முதல்கட்டமாக திங்கள்கிழமை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனா்.    இந்த நிலையில் நாடு முழுவதும் 2,829 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]Read More

பாப்கார்ன்

8 நாள்களில் சீனா கட்டி முடித்த சிறப்பு மருத்துவமனை!

   கரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை சீனா 8 நாள்களில் கட்டிமுடித்துள்ளது.    கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களை கண்காணித்து உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் விதமாக வூஹானின் ஹௌசின்ஷான் பகுதியில் சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று சீன அரசு அறிவித்திருந்தது.    சுமார் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய […]Read More

முக்கிய செய்திகள்

சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்…..

  ஏர்-இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து முதல்கட்டமாக 324 இந்தியர்கள் சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் தில்லி விமானநிலையம் வந்தடைந்தனர்.     சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சுமார் 600 இந்தியா்கள் தாய்நாட்டுக்கு திரும்ப மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்தனா்.    இதையடுத்து, அங்குள்ள இந்தியா்களை அழைத்து வருவதற்காக, ஏா்-இந்தியாவின் சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை மதியம் 1.20 மணியளவில் […]Read More