Tags :சுதா ரவி

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 11 – சுதா ரவி

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி,ஒதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பதுவேதம் நான்கினும் மெய்பொருள் ஆவதுநாதன் நாமம் நமச்சிவாயவே…… தில்லை நடராஜனின் முன்னே கண்மூடி நின்ற கார்த்தியின் மனதில் பல்வேறு குழப்பங்கள். பிச்சாவரதிற்கு சென்று வந்த பின்னர் மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு மேலும் குழப்பமே மிஞ்சியது… ஹரியின் ஆடியோ பைலை மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு அவன் தன் ஆதாரத்தை கோவிலில் எங்கோ விட்டு சென்றிருக்கிறான் என்ற அளவுக்கு புரிந்தது. ஆனால் அது எங்கே […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 10 – சுதா ரவி

நிமிட நேரத்திற்குள் நடந்த நிகழ்வில் தான் கண்டது கனவோ என்ற எண்ணமே தோன்றியது. நின்ற இடத்திலேயே பிரமித்து போய் நிற்க, எதற்கோ வெளியே வந்த ராஜி மகள் பிரமை பிடித்தார் போல் வாயிலிலேயே நிற்பதை பார்த்து அவளை உள்ளே அழைத்து சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவன் எப்படி சரியாக திரும்பி பார்த்து கண்ணை சிமிட்டினான் என்று குழம்பிக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவன் மனம் அவன் புறம் மயங்கி நிற்பதை நினைத்து […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 9 – சுதா ரவி

முதல் நாள் இரவு கடற்கரையில் பார்த்த நிகழ்வுகளை மனதில் ஒட்டி பார்த்தவண்ணம் காலை வேலைகளை செய்து கொண்டிருந்தான் கார்த்தி. ஜன்னலோரம் வந்து வெளிப்புறத்தை ஆராய்ந்தான். மக்கள் அவரவர் வேலையில் மும்மராக நாட்டிற்குள் நடக்கும் மர்ம நடவடிக்கைகளை அறியாமல் நடமாடிக்கொண்டிருந்தனர். பணம் என்னும் காகிதம் மனிதனை சக உயிர்களை கொன்று புதைக்கும் ஆயுதமாக மாற வைத்ததை  என்னவென்று சொல்வது என்று எண்ணியபடி கட்டிலில் வந்து அமர்ந்து போனை எடுத்து ஆதிக்கு பண்ணினான். “ சொல்லு கார்த்தி.நேத்து என்ன நடந்துது?நீ […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 8 – சுதா ரவி

8 தோல்வியின் வலியை உணர்ந்தவர்கள்  உடைந்து போயினர்…ஆர்ஜே வந்த பிறகு இதுவரை பல சண்டைகள் மோதல்கள் ஏற்பட்டாலும் இந்த முறை தான் அவர்களுக்கு மிகப்பெரிய அடி. வீட்டில் இருந்த தாண்டவத்துக்கோ மகன்களிடம் இருந்து போனும் வரவில்லை தான் அடித்தாலும் அவர்கள் எடுக்கவில்லை என்றதும், எதுவோ எங்கோ தவறு நடந்து விட்டது புரிந்து போய் அடுத்த என்ன என்று குழம்பி நின்றார்…வீடு முழுவதும் குளிர்சாதனத்தின் உதவியால் குளிரூட்டபட்டிருக்க…அந்த குளிரிலும் அவர் உடம்பு முழுவதும் உள்ளத்தின் புழுக்கத்தின் காரணமாக வியர்த்து […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 7 – சுதா ரவி

பெண் பார்த்துவிட்டு வந்த பிறகு நடந்த அமர்க்களத்திற்கு பிறகு வீடே அமைதியாய் இருந்தது. சிவதாண்டவம் தன் மனதில் ஆயிரம் கவலைகள் சூழ மனைவியின் அருகில் அமர்ந்திருந்திருந்தார். மகன்களோ நடந்தவைகளை எல்லாம் மறந்து ஈஸ்வரியின் உடல்நலம் மட்டுமே முக்கியம் என்று கருதி பார்த்துக் கொண்டிருந்தனர்.   ஈஸ்வரியோ கண் விழித்ததும் கதிரை தேடினார். அவன் வந்து அருகில் அமர்ந்ததும்,அவன் தலையை மெல்ல கோதி விட்டு மற்ற மகன்களை பார்த்து ”இவன் உங்க தம்பிடா இவனை கண்டபடி பேச உங்களுக்கு […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 6 – சுதா ரவி

அவன் கண்களில் தெரிந்த மாற்றத்தை கண்டு “என்ன இவன் நாலு வருஷம் கழித்து கூட அவளை மறக்காம இப்படி பைத்தியம் மாதிரி இருக்கானே” என்று நினைத்துக் கொண்டான். பிறகு அவன் தோள்களை பற்றி உலுக்கி…”டேய்! நீ என்ன சின்ன பையனா? இருபத்தொன்பது வயசாகுது. என்னவோ காலேஜ் படிக்கிற பையன் மாதிரி மறக்க முடியாது வைக்க முடியாதுன்னு டயலாக் பேசிகிட்டு இருக்கே. வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லாமே மாறி போகும். சும்மா புலம்பிகிட்டு இருக்காம ஆகுற வழியை பாரு”என்றான் விஸ்வா. […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 5 – சுதா ரவி

அத்தியாயம் – 5 அன்று ஞாயிறு விடுமறை தினமாதலால் காலை உணவை முடித்து  விட்டு குடும்பத்தினர் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, எப்பவும் போல் அதில் கலந்து கொள்ளாமல் தன் அறையில் இருந்த கதிர் நண்பனை பார்க்க கிளம்பினான். சந்தன நிற பேண்ட்டும் கரு நீல சட்டையும் அணிந்து ஒரு மாடல் போல் இறங்கி வந்த மகனை பெருமிதம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. கதிரை பார்த்ததுமே சற்று முகத்தை சுளித்த தாண்டவம் “சின்னையா  எங்கே […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 4 – சுதா ரவி

அத்தியாயம் – 4 விடிந்தும் விடியாத வேளையில் பறந்து செல்லும் பறவைகளின் ஒலியும், மெல்லிய இசையாக ஓடிக் கொண்டிருக்கும் நீரின் ஓசையும் படுத்திருந்த உத்ராவை நித்திரையில் இருந்து எழுப்பியது. படுத்திருந்த இடத்தில் இருந்து மெல்ல எழுந்து நிற்க முயன்றாள்.  கட்டி இருந்த சேலை நழுவ அதை சரி செய்ய முடியாமல் கையில் இருந்த சங்கிலி தடுக்க……..மனமோ தன் நிலையை எண்ணி ஆத்திரம் கொண்டது. இயலாமையில் அழுகை ஒரு பக்கம்,ஆத்திரம் ஒரு பக்கம் தாக்க அப்படியே மடிந்து உட்கார்ந்து […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 3 – சுதா ரவி

அத்தியாயம் – 3 சந்திரனும் சூரியனும் ஒரு நிமிடம் சந்தித்து பிரியும் விடியலின் நேரத்தில் மெல்லிய காற்று உடலை தழுவி செல்ல, தன் வீட்டு தோட்டத்தில் ஜாகிங் போய் கொண்டிருந்தான் கதிர். வீட்டினர் அனைவரும் உறக்கத்தில் இருக்க அவன் மட்டுமே தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தான். அண்ணன்கள் இருவருக்கும் இதிலெல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை. எந்த நேரமும் அப்பாவுடன் பிசினஸ் விஷயமாக அலைவார்களேத் தவிர இதற்கெல்லாம் வரவே மாட்டார்கள். ஒரு மணி நேரம் ஓடி முடிக்கும் வேளையில் வீட்டில் […]Read More

தொடர்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 2 – சுதா ரவி

அத்தியாயம் – 2 அமைதியான பௌர்ணமி இரவு ஊரடங்கிய வேளையில் கருப்பு நிற ஜாகுவார் கார் சீரான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது.நாள் முழுவதும் ஓடி உழைத்து அசதியில் உறங்கும் மக்களிடையே குற்றங்கள் புரியும் மனங்கள் மட்டும் உறங்காது விழித்திருந்தது. கடற்கரையின் இருளில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு தன் நீள கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து நாலே எட்டில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் அருகே வந்தான். அவன் படகின் அருகில் வந்த மறுநிமிடம் செடிகளின் இடையில் […]Read More