சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!

 சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, விடுமுறைக் கால அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில் தாக்கிக்கிறது. நாடு முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இந்நிலையில், சென்னை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 முதல் ஜூன் 2 ஆம் தேதி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது. கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் அறிவித்துள்ளார்.

விடுமுறைக் கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...