2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியானது..!

2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரையும், 2027ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதிகள் குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், போட்டியின் அட்டவணைகளை கடைசி நேரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் வெளியிடுவதை தவிர்க்கவே அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் நாளை மறுநாள் (நவ. 24) முதல் இரண்டு நாள்களுக்கு ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெறுகிறது. மொத்தம் 574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள பெயர்களை அளித்துள்ளனர். பாகிஸ்தானை தவிர மற்ற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐபிஎலில் விளையாட தங்கள் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!