Tags :இந்துமதி

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 12 | இந்துமதி

அத்தனை சந்தோஷமாக ருக்மிணியம்மாள் இருந்ததே இல்லை. தரையில் கால் பாவாமல் நடந்ததில்லை. நினைவுகள் நிலைகொள்ளாமல் அலைந்ததில்லை. சமையலறைக்கும் வாசலுக்கும் ஓடினதில்லை, செய்கின்ற காரியங்களில் கவனமற்றுப் போனதில்லை. ‘கணவருக்குத் தெரியப்படுத்தலாமா..?’ தொலைபேசி ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு யோசித்தாள். “இல்லை, வேண்டாம். முதலில் நாம் பார்க்கலாம். நம் மனசுக்குப் பிடித்தபின், கணவரிடம் சொல்லலாம்.” ரிஸீவரை வைத்தாள். ‘நம் மனசுக்குப் பிடிப்பதென்ன…? அதான் மதுவிற்குப் பிடித்தாகி விட்டதே…’ உடனே அவனுக்குச் சொல்ல நினைத்து, அவன் இருக்கக்கூடிய அத்தனை இடங்களுக்கும் […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 11 | இந்துமதி

தொலைபேசியைப் பார்த்ததும் கை குறுகுறுத்தது சித்ராவிற்கு. யாருடனாவது பேசு பேசு என்றது. வழக்கமாக இருந்தால் ஷைலஜாவிற்கு போன் பண்ணியிருப்பாள், இருவரும் மணிக்கணக்கில் அறுத்திருப்பார்கள். மகாபலிபுரம் போய் வந்ததிலிருந்து இருவருமே அதிகம் பேசுவது குறைந்து போயிற்று. கலகலப்பாகப் பழகினது நின்று போயிற்று. இணை பிரியாமல் இருந்தது விலகிப் போயிற்று. கல்லூரியில் பார்த்தால்கூட ‘ஹாய்’ சொல்லிப் பிரிந்தார்கள். பேசப் பிடிக்காமல் நகர்ந்தார்கள். அவர்களது வகுப்பிலிருந்த அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்கிற ஆர்வத்தில் நுழைந்து பார்க்க […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 10 | இந்துமதி

“என்ன மது பார்க்கறீங்க..? நீங்க கூட வெறும் பியருக்கு அலற்றுகிற பிறவிதானா…?” சித்ரா கேட்டாள். “நோ… நோ… அப்படியில்லை…” என்று தயங்கினான் மது. “பின்ன என்ன தயக்கம்..? நான் போய் கார்லேருந்து பியர் டின்களைக் கொண்டு வரட்டுமா…?” மது மெதுவாகத் திரும்பி ஷைலஜாவைப் பார்த்தான். அவளது முகத்தில் தெரிந்த மிரட்சி அவனை உடனே பதில் சொல்ல விடவில்லை. “என்ன அவளைப் பார்க்கறீங்க…? அவ அனுமதிச்சால்தான் சரி சொல்லுவீங்களா…?” “இல்லை… அதுக்கில்லை…ஷைலஜாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. அவளை விட்டுவிட்டு நாம் […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 9 | இந்துமதி

சித்ராவை மணலில் படுக்கவைக்க மனமில்லை, மதுவிற்கு. கெஸ்ட் ஹவுஸ் வரை தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று தான் நினைத்தான். அவனது உடலை அழுத்திய பெண்மையின் சுகத்திலிருந்து விடுபட மனது மறுத்தது. இதுவரை அறிந்திராத அனுபவித்திராத சுகமாகப்பட்டது. ஷைலஜாவிடம் சின்னச் சின்னதாய் விஷமங்கள் செய்திருக்கிறான். கைகளால் விளையாடி இருக்கிறான். அதிக பட்சமாய் முத்தமிட்டிருக்கிறானே தவிர, இப்படி உடலோடு அழுத்தினதில்லை… தோளில் சரித்து ஒட்டிக் கொண்டதில்லை. காதருகில் உதடுகள் வருட, குரல் குழைந்து உருக, ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை. இதில் […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 8 | இந்துமதி

8 அந்தத் தனியார் விருந்தினர் மாளிகையின், மர நிழலில் காரை நிறுத்தினாள் சித்ரா. ‘அப்பாடா…’ என்று கீழே இறங்கினாள். ஒரு முறை கைகளை மடக்கி தலைக்கு நேராக உயர்த்தி குனிந்து பாதம் தொட்டாள். அதைப் பார்த்த மது மென்மையான குரலில் கேட்டான்.“அவ்வளவு தூரம் காரை ஓட்டிக்கிட்டு வந்தது கஷ்டமாக இருக்கு இல்ல… அதுக்குத்தான் நான் ஓட்றேன்னு சொன்னேன்…”அவனது அந்தக் கரிசனத்தைத் தாங்க முடியாத ஷைலஜா படபடத்தாள்,“அவதானே பிடிவாதம் பிடிச்சு ஓட்டிக்கிட்டு வந்தா. அப்போ பட வேண்டியது தான்.”சித்ரா […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 7 | இந்துமதி

7 மகாபலிபுரம் எல்லையைத் தொட்டதும் காரின் வேகத்தைக் குறைத்த சித்ரா, மதுவைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள், “இப்போ எங்கே போகப் போறாம்…?” தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் பெயரைச் சொன்னான் மது. “அங்கேயா புக் பண்ணியிருக்கீங்க…?” சித்ராவின் கண் விரிப்பையும், ஆச்சரியத்தையும் பார்த்த மது சற்று தயங்கினாள், “ஏன் கேட்கறீங்க..? கெஸ்ட்ஹவுஸ் வேணாமா..?” “நோ…நோ… இதுவரை நான் அந்த கெஸ்ட் ஹவுஸுக்குப் போனதே இல்லை. ரொம்ப அழகாக இருக்கும். ரொம்பப் பெரிய பணக்காரங்க, அதாவது கோடீஸ்வரங்க தங்கற […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 6 | இந்துமதி

பளீரென்று மஜந்தா நிற சல்வார் கமீஸுடன் காரிலிருந்து இறங்கிய சித்ராவைத்தான் முதலில் பார்த்தான் மதுசூதனன். ‘யார் இந்தப் பெண்… இவ்வளவு அழகாக இருக்கிறாளே…’ என்று நினைத்துக் கொண்டான். கூடவே பின்னால் இறங்கிய ஷைலஜா கண்ணில் பட்டதும் தான் அவள் சித்ரா என்பது புரிந்தது. ஒரு வினாடி மனம் வாடிற்று. அதுவரை சித்ராகூட வரப்போவதைப் பற்றின பிரக்ஞையற்றிருந்தான், ‘ஷைலஜாவுடன் மகாபலிபுரம்’ என்பதைத் தவிர வேறு நினைவின்றி இருந்தால், அந்த நாள் முழுதும் ஷைலஜாவுடன் எப்படி இருக்க வேண்டும், அவளை […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 5 | இந்துமதி

அன்று காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கீழே இறங்கி வந்த மதுவைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள் ருக்மிணியம்மாள். அவன் அத்தனை சீக்கிரம் எழுந்து அந்த அம்மாள் பார்த்ததே இல்லை. தினமும் அவனை எழுப்புவதற்கு சிரமப்படுவாள். மாடிப்படியருகில் நின்று குரல் கொடுத்துச் சலித்துப் போவாள். “மது… மணி ஏழாச்சுப்பா…” “எட்டரையாகப் போறது. எழுந்திருப்பா…” என்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கத்தி ஓய்ந்து போவாள். மாடியேற முடியாததால் அவனை எழுப்புவது பெரும்பாடாகப் போகும். அவனும் அத்தனை சுலபத்தில் […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. | 4 | இந்துமதி

“அம்மா நான் சித்ரா வீட்டுக்குப் போயிட்டு வரேம்மா…” “இத்தனை நேரத்துக்காடி…? விளக்கு வைக்கிற நேரமாச்சே…?” “ஆமாம்மா. சித்ராவுக்கு இன்னிக்கு மிஸ். மாத்யூஸ் நடத்தின பாடத்துல எதுவுமே புரியலையாம். ‘வந்து கொஞ்சம் சொல்லித்தாடீ’ன்னு கூப்பிடறா…” “ஏன்… அவ இங்கே வரக்கூடாதா….? அவளுக்குக் கார் இருக்கு, டிரைவர் இருக்கான்….” “ஆனால் இங்கே படிக்க வசதியாகத் தனி ரூம் இல்லையேம்மா. ஏர்கண்டிஷன் இல்லையே…..அமைதியான சூழ்நிலை இல்லையே… பிளாட் குழந்தைங்க இரைச்சலும், கத்தலும் எனக்குப் பழகிப்போச்சு. ஆனால் அவளுக்கு இந்த சத்தத்தில் படிச்சுப் […]Read More

தொடர்

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |3| இந்துமதி

தொலைபேசி ஒலித்தது. அதுவரை அதன் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்த ஷைலஜா, படிக்கிற பாவனையில் இருந்த ஷைலஜா, ஒரு வினாடிக்கு முன்தான் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். கதவை மூடப் போனபோது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. பாதி மூடிய கதவை அப்படியே விட்டு விட்டு அவள் ஓடி வந்தபோது அம்மா எடுத்து விட்டாள். ஆனால் அம்மாவின் ஹலோவிற்குப் பதில் இல்லை. தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டுஅம்மா ரிஸீவரை வைத்துவிட்டு இரண்டடிகள் நகர்ந்திருக்க மாட்டாள். மீண்டும் ஒலித்தது. மறுபடியும் அம்மாவே எடுத்தாள். ஷைலஜாவிற்கு மனசு […]Read More