சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச-07) விடுமுறை..! | நா.சதீஸ்குமார்

 சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச-07) விடுமுறை..! | நா.சதீஸ்குமார்

மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெருமழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளைய தினம் சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. பேயாத பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.

சென்னை புறநகர் பகுதிகளில் எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் நாளைய தினமும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளைய தினம் வியாழக்கிழமையும் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...