சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படம் ‘டிராமா’

நடிகர் கிஷோர்குமார் கதாநாயகனாகவும் காவ்யா பெல்லு கதாநாயகியாக வும் நடிக்கும் சிங்கிள் ஷாட் திரைப்படம் ‘டிராமா’. இந்தப் படம் கொரோனா வுக்கு முன்பு எடுக்கப்பட்டு கொரோனா பொதுமுடக்கத் தடைக்குப்பின் பணிகள் நடந்து தற்போது திரைக்கு வருகிறது.

மலையாள திரை உலகில் ‘என்டே சினிமா’ என்ற படத்தின் மூலம் அறிமுக மான இயக்குநர் அஜு கிழுமலா, இந்தப் படத்திற்குச் சிறப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

இப்படத்தை ஜெயச்சந்திரன் பிபி, டாக்டர் ஜாலி அம்புகான் ஆகியோருடன் இணைந்து ஆண்டனி ராஜ் எம் தயாரித்துள்ளார்.

மின்வெட்டின்போது ஒரு மூத்த அதிகாரி ஸ்டேஷனுக்குள் கொல்லப்பட் டார், மேலும் கொலையாளியைக் கண்டுபிடிக்க விசாரணை நடைபெறு கிறது. பில்டிங்கில் இருக்கும் அத்தனை பேரையும் விசாரிப்பதுதான் ‘டிராமா’ படத்தின் மையக் கருத்து.

படம் முக்கியமாக காவல் நிலையத்திற்குள் படமாக்கப்பட்டாலும், கதை யும் கேமராவும் அந்தக் கட்டடத்திற்கு வெளியேதான் பயணிக்கிறது. படத் தில் கார் மற்றும் பைக் போக்குவரத்தும் உள்ளன. இந்த எல்லாமே ஒரு ஷாட்டிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் சிறப்பு.

இயக்குநர் அஜு கிழுமலா

இப்படி ஒரு தந்திரமான ஷாட்டை எப்படி எடுத்தீர்கள்’ என்று இயக்குநர் அஜு கிழுமலாவிடம் கேட்டபோது, ​​“ஆறு மாதகால போஸ்ட் புரொடக்‌ஷ னின் காரணமாக, பல ஒத்திகைகள் மற்றும் முழு குழுவினருடன் பயிற்சி யுமே காரணம். இதற்காக சுமார் 80 பேர் மீண்டும் மீண்டும் பயிற்சி செய் தார்கள். படப்பிடிப்பின்போது ஃபிரேம்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், நிழலைத் தவிர்க்கவும் கேமராக்கள் மூலம் பயிற்சி பெற்றோம்.

நடிகர் கிஷோரைப் பற்றி இயக்குநர் அஜு கிழுமலா சொல்லும்போது. “படத்திற்கான அவரது அர்ப்பணிப்பைப் பற்றிப் பேச வார்த்தைகள் இல்லா மல் நான் தவிக்கிறேன். நள்ளிரவில் கூட ஒத்திகை பார்க்க அவர் செட்டுக்கு வந்தார். ஒரு அனுபவமிக்க நடிகர் ஒரு பரிசோதனைப் படத்திற்காக இவ் வளவு மெனக்கெட்டது ஊக்கமளிக்கிறது. சார்லி சார் இந்தப் படத்திற்குத் தனது தளராத ஆதரவை அளித்தார்” என்றார்.

நடிகர் கிஷோரிடம் பேசினோம், “இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த யூனிட் டும் 180 நாட்களுக்கு மேல் ஒத்திகை பார்த்து ஒரு மணி நேரம் 53 நிமிடங் களில் படத்தை எடுத்துள்ளனர். ஒரு காவல் நிலையத்தில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஒரு கொலை நடக்கிறது. கொலையாளி மற்றும் குற்றத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய விசாரணை பின்தொடர்கிறது,” என்றார்.

ஆனால் அதற்கு ‘நாடகம்’ என்று ஏன் தலைப்பு வைக்க வேண்டும்?

“தியேட்டரில் தவறுகளுக்கு இடமில்லை. மேடையில் ஏறும்போது எளிமை யாக நடிப்பது. மீண்டும் நடிக்க இடமில்லை. அதேபோல இந்தப் படமும் சிங்கிள் ஷாட் படமாக இருந்ததால் ஒரே ஷாட்டில் எங்களின் பகுதியை நம்பும்படி நடிக்கவேண்டும். ‘டிராமா’ என்ற தலைப்பு, தவறுகளைத் திருத்தி கொள்வதற்கு இரண்டாவது வாய்ப்புகள் இல்லை என்பதுதான் காரணம்.” என்றார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமான இதில் மூன்று பாடல்களை கவிஞர் ஏகாதசி எழுதியுள்ளார். அதில் மதுரையைப் பற்றி வரும் பாடல் சூப்பர் ஹிட் பாடல்.

பாடலாசிரியர் ஏகாதசி

பின்னணி இசையமைத்த பிஜிபால், ‘நீ யாரோ…?’ என்கிற பாடலுக்கு இசை யமைக்க, ‘மல்லிகப்பூ’ என்கிற பாடலுக்கு ஜெயா கே. தாஸ் இசையமைத் திருக்கிறார், ‘சுண்டுவிரலில்’ என்கிற  பாடலுக்கு ஜெஸின் ஜார்ஜ் இசை யமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு பகுதி காட்சி பகலிலும் ஒரு பகுதி காட்சி இரவிலும் நடக்கிறது. பல திருப்பங்கள் உள்ள இந்தப் படத்தில் நடிகர் சார்லி, ஜெய் பாலா, வின்சன்ட் நகுல், வினோத் முன்னா, மரியா பிரின்ஸ், பிரித்தி ஷா பிரேம்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கேமரா ஷைனோஸ், எடிட்டிங் அகில் அலியாஸ், இசை பிஜிபால்.

சாதனை முயற்சியாகவும் விற்பனை நோக்கத்திலும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் பரபரப்பான திரைக்கதை அமைப்பில் சிங்கிள் ஷாட் படமாக எடுத் திருக்கிறார்கள். இதற்காக நடிகர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கப் பட்டது.

சில காட்சிகளில் நடிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடித்தது படத்தில் அப் படியே பதிவாகியுள்ளது. சிறப்பான பயிற்சி காரணமாக ஒரே ஷாட்டில் எந்த இடை யூறும் இல்லாமல் படமாக்கப்பட்டதால் படக்குழுவினர் மகிழ்ச்சி யைத் தெரிவித்துக்கொண்டனர்.

ரிலீசுக்குத் தயாராக இருக்கும் இந்தப் படம் தமிழ், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!