என் படத்தை வெளியிடக் கூடாது என சிலர் மறைமுகமாக வேலை செய்தனர் – நடிகை அமலா பால் உருக்கம்

 என் படத்தை வெளியிடக் கூடாது என சிலர் மறைமுகமாக வேலை செய்தனர் – நடிகை அமலா பால் உருக்கம்

அமலா பால் புரொடக்ஸன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துத் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்தத் திரைப் படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பத்திரி கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கடாவர் – ஒரு மெடிக்கல் க்ரைம் திரில்லர். காவல்துறையில் பணியாற்றும் தடய வியல் நிபுணர் பத்ராவாக நடிகை அமலாபால் அற்புதமான நடிப்பை வெளிப் படுத்தி இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம்பெற்றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடி யாகச் சென்று பார்வையிட்டிருக்கிறார் அமலா பால்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”2016 ஆம் ஆண்டில் இந்தக் கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக்கதை எழுதினோம். பல் வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து கதை கூறியபோது ஒவ்வொருவரும் பல ஆலோசனைகளை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தை திசை திருப்பவே முயற்சித்தார்கள். இதனால் சோர்வு ஏற்பட்டது.

இந்த தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலா பாலைச் சந்தித்தோம். அவரிடம் கதையைக் கூறியதும், ‘பிடித்திருக்கிறது. நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு தயாரிப்பாளரைத் தேடினோம். அமலாபால் நாயகி என்றதும் அவர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இந்தப் படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமலபால் நம்பிக்கை அளித்தார். அன்று முதல் இன்று வரை அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தருகிறார்.

2018 ஆம் ஆண்டில் இதற்கான பணிகளைத் தொடங்கினோம். இடையில் கொரோனா பாதிப்பு காரணமாகப் படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற் றது. இருப்பினும் படத்தின் பணிகளை நிறைவு செய்தோம்.  படத்தை வெளியிட நினைத்தபோது,  தவிர்க்க இயலாத பல தர்ம சங்கடங்களை எதிர்கொண்டோம். பிறகு ஒரு வழியாக இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார், எங்களது ‘கடாவர்’ திரைப்படத்தினை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டு, எங்களது கனவை நனவாக்கியத்துடன், பிரம்மாண்டமாக வெளியிட்டு எங்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.

‘கடாவர்’ படத்திற்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளை பேசுகையில், “நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினாலும், என்னுடைய கனவு சினிமாதான். 2010களில் என்னுடைய சகோதரர் இறந்தார். அவரது உடல், உடற்கூறாய்வு செய்வதற்காகப் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்வையிட்டபோதுதான் இப்படத்திற்கான கதைக்கரு உருவானது. அதன் பிறகு இயக்குநர் அனூப் எஸ். பணிக்கருடன் இணைந்து ஓராண்டு திரைக் கதையை எழுதினோம். பிறகு இந்தக் கதையை அமலா பால் தயாரிக்க விருப்பம் தெரிவித்தபோது, எங்களுக்கு இருந்த கவலை அகன்றது. அவர் இந்தத் திரைப் படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கினார்” என்றார்.

‘கடாவர்’ படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகியுமான நடிகை அமலா பால் பேசுகையில், ”கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழா வில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களையும் பார்வையாளர்களையும் நேரில் காணும்போது உற்சாகம் பிறக்கிறது.

பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல்துறையில் பணி யாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன்.

அபிலாஷ் பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ். பணிக்கரும் என்னைச் சந்தித்து ‘கடாவர்’ படத்தின் கதையைக் கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமை யானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதைக் கண்டு, தயாரிப் பாளராகவும் பணியாற்றச் சம்மதம் தெரிவித்தேன். இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக திகழ்ந்த என்னுடைய தாயார் மற்றும் சகோதரருக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்தத் திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளி யிட திட்டமிட்டபோது பல வடிவங்களில் தடைகள் உருவானது. இதை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக வேலை செய்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசிர்வாதத்தினாலும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ.டி.டி.யில் ‘கடாவர்’ வெளியாகிறது.‌

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விஷயங்களும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ரசிகர்கள் வழக்கம்போல் ‘கடாவர்’ திரைப்படத் திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...