யதார்த்த இயக்குநர் மகேந்திரன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

 யதார்த்த இயக்குநர் மகேந்திரன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் 1939, ஜூலை 25 பிறந்த இயக்குநர் மகேந்திரன் பத்திரிகையாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். கல்வெட்டுகள் போல் தமிழ்த் திரையுலகின் வரலாற்றுப் பக்கங்களில் தனது பெயரைப் பொறித்துவிட்டுச் சென்றுள்ளார்.

கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு சென்னைக்கு அழைத்துவந்த மகேந்திரனை தன் வீட்டிலேயே எம்.ஜி.ஆர் தங்க வைத்தார். அப்போது கல்கி எழுதிய  ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அவரிடம் கொடுத்து அதனைத் திரைப்படமாக எடுப் பதற்குத் திரைக்கதையை எழுதுமாறு கூறினார். அவரும் எழுதினார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களினால் எம்.ஜி.ஆரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதோடு படமும் தயாராகாமல் போனதால் மகேந்திரன் மிகவும் ஏமாற்ற மடைந்தார்.

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் திரைப்பட வாழ்க்கையில் அனைவராலும் கொண்டாடப்பட்ட திரைப்படமான ‘தங்கப்பதக்கம்’ படத்தின் கதை மற்றும் வசனத்தை எழுதியவர் மகேந்திரன்.

இதுவரை 168 படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆனாலும் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த முள்ளும் மலரும், ஜானி மற்றும் கை கொடுக்கும் கை ஆகிய படங்களில்தான் ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காணப்பட்டு இன்று வரை அந்தப் படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

மகேந்திரனுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் நல்ல நட்புறவு இருந்திருக்கிறது. அதைப் பல மேடைகளில் மகேந்திரனே கூறியிருக்கிறார்.

ஒரு பட விழாவில் அவர் கூறிய வார்த்தை, “முள்ளும் மலரும் படத்தைப் பற்றி யும் என்னைப் பற்றியும் இன்று வரை நீங்கள் எல்லாரும் பேசுகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் நான் மட்டும் அல்ல. அந்தப் பிறவிக் கலைஞனும்(கமல்)தான்.

மகேந்திரன் மறைந்த தினத்தன்று கமல்ஹாசன் கூறிய வார்த்தைகள்,

“முள்ளும் மலரும் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. தமிழ்ப் படங்கள் செய்ய ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திரா அவர்களையும் மகேந்திரனையும் என் வீட்டில் வைத்துப் பேசி இரண்டு பேரும் இணைந்து வெற்றிப் படம் எடுங்கள் என்று கூறினேன். அது போலவே அவர்களும் செய் தார்கள். படத்தின் கடைசிப் படப்பிடிப்பு நாட்களில் இந்தப் படத்திற்காக புரோடக் ஷன் மேனேஜர் போலவே வேலை செய்திருக்கிறேன். ஏனென்றால் அந்தப் படம் மிக அற்புதமான படம். எக்காரணத்தைக் கொண்டும் அது தடைப்பட்டு விடக் கூடாது என எல்லோரும் முயன்று வெளிக்கொண்டு வந்த படம் தான் முள்ளும் மலரும்”.

ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.

மகேந்திரனின் முதல் படம் தொடங்கி, அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார்.

மகேந்திரன் 1966ஆம் ஆண்டில் ‘நாம் மூவர்’ படத்திற்குத் திரைக்கதை எழுத் தாளராக முன்னேறினார். படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதே பேனரிலிருந்து அதிக சலுகைகளைப் பெற்றார். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான சபாஷ் தம்பி மற்றும் பணக்காரப் பிள்ளை போன்ற படங்களில் பணியாற்றினார். சிவாஜி கணேசன் நடித்த ‘நிறைகுடம்’ படத்திற்கான ஸ்கிரிப்டையும் எழுதினார். 2014ஆம் ஆண்டில் புதுமுகங்கள் நடித்த ஒரு புதிய படத்தில் பணிபுரிவதாக அறிவித்தார், இதற்காக இளையராஜா இசையமைத்தார்.

மகேந்திரன், புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ என்ற குறும்புதினத்தை அடிப்படை யாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ்த் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.

கிட்டத்தட்ட 26 படங்களுக்குத் திரைக்கதை எழுதி, சிறந்த திரைக்கதை எழுத் தாளராக மகேந்திரன் திரைத்துறையில் நுழைந்தார். அவர் தனது முதல் திசை முயற்சியான ‘முள்ளும் மலரும்’ (1978) மூலம் உடனடி தாக்கத்தை ஏற்படுத் தினார். மகேந்திரன் அடுத்த திரைப்படமான ‘உதிரிப்பூக்கள்’ புதுமைப்பித்தன் எழுதிய ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது,

மகேந்தினது ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான விருது உட்பட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.

முள்ளும் மலரும் (1978) சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

உதிரிப்பூக்கள் (1979) சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். நெஞ்சத்தை கிள்ளாதே (1980) தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப் பட விருது பெற்றது.

தெறி (2016) சிறந்த வில்லன் நடிகர் ஐ.ஐ.எஃப்.ஏ. உத்சவம் விருது

2004ஆம் ஆண்டு மகேந்திரன் ‘சினிமாவும் நானும்’ என்னும் நூலினை எழுதியுள் ளார்.

மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் நடிகை சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில்  அவரது நடிப்பாற்றல் பேசப்பட்டது.

கன்னட நடிகை அஸ்வினியைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம் உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.

சில படங்களில் மகந்திரன் நடித்துள்ளார். காமராஜ் (2004), தெறி (2016), நிமிர் (2018) ரஜினி நடித்த பேட்ட (2019) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் இறப்பதற்கு முன், சென்னையில் உள்ள போஃப்டா திரைப்பட நிறுவனத் தின் திசைத் துறையின் தலைவராக இருந்தார்.

ஈழத் தமிழர்கள் மேல் பற்றுகொண்டிருந்தவர் மகேந்திரன்.

2002 ஓஸ்லோ அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலை வர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பிய சிலிர்ப்பான  அனுபவத்தை ’குமுதம்’ இதழில் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் மகேந்திரன். எப்போது எத்தனை முறை  படித்தாலும் திகட்டாத பதிவு இதோ…

“திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த ‘சாசன’த்தின் (திரைப்படத்தின்) இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறு வார்த்தையாக மறுப்புச் சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து (1996) அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவை எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 1996ன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோதுதான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.

சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள். அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதற்றம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக் கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்கமுடியாத இடத்தை நோக்கிய பயணம். சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக்கொண்டே வந்தார்.

தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்கவேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமான தல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலைகொள்ளாமல் தவித் தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப் போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்புக் குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்து விட்டது. சேராவிடம், “நான் அவரை எப்படிக் கூப்பிடுவது, சார் என்றா அல்லது  வேறு முறையிலா?” என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். “நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப் படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம்” என்றார். நான் பயப்படவில்லை. பெரு மிதப்பட்டேன்.

அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத் தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது.

என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக் கதவுகளை யெல்லாம் திறந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தார் தலைவர்.

உருகிக் கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத் தொடங்கினார் தம்பி.

நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்? உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம். ராணுவம் எங்கள் நாட்டில் இளம் பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப்படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக் காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்… யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக் காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப் பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டி.களைப் பரிசாகத் தந்தார். அரை மணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத் திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித் தார். முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத் தைப் பகிர்ந்தார்.

நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். “நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தா லும் உங்களைச் சந்திப்பேன்” என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.

கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார். விமானத் தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது,

சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தைகூட பிரபாகரன் அரசியல் பேச வில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.

“அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக் கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந் திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.”

உடல்நலக்குறைவு காரணமாக 79 வயதில் 2019 ஏப்ரல் 2ஆம் தேதி யதார்த்த இயக்குநர் மகேந்திரன் இந்த உலகத்தைவிட்டு மறைந்தார். அவரின் புகழுக்கும் கலைப் படைப்புகளுக்கும் மறைவே கிடையாது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...