13.செருப்பு தன்னை யாரோ செருப்பால் அடித்துவிட்டது போன்ற வலியில் தேவசேனாபதி அயர்ந்து அமர்ந்திருக்க, அதைக் கவனிக்காமல் தர்மா தத்துவம் பேச ஆரம்பித்தான். “ஒரு ஆணுக்கு மிக முக்கியமானது அவனுடைய பர்ஸ். அதே போலப் பெண்களுக்கு ஹேண்ட்-பேக். அவர்களுடைய பர்சனாலிட்டியின் ஒரு பாகம் அது. சொல்லப் போனால் ஒருவருடைய அவருடைய பர்ஸ் அல்லது ஹேண்ட்-பேக் அவருடைய குணங்களின் கண்ணாடி என்றே சொல்லலாம். “சாதாரணமாக, பர்ஸ் என்பது நம்முடைய பணம் ப்ளஸ் நம்மை அடையாளம் காட்டும் டாக்குமெண்ட்ஸ் இவைகளைத்தான் பிரதானமாகக் […]Read More
சரியாக ஆறு மணிக்கு, வாசலில் பெரிய வெளிநாட்டுக்கார், நீண்ட படகைப்போல தெருவை அடைத்து நின்றது! அந்த தெருவில் பலர், வேடிக்கை பார்த்தார்கள் ஆர்வமாக. ஏற்கனவே பாரதி மீடியாவில் பிரபலமான பிறகு அந்த தெருவில் ஒரு நபர் கேமராவும் கையுமாக சுற்றிக்கொண்டிருந்தான்! அவனுக்கு மூக்கு வியர்த்து வெளியே வந்து விட்டான்! பூதம், அஞ்சு இருவரும் காரை விட்டு இறங்க, அருள் பின்னால் தன் பைக்கில் வந்து இறங்கினான். சிதம்பரம் வாசலுக்கே வந்து வரவேற்றார்! அம்மாவும் வந்து கை கூப்பினாள்! […]Read More
42. கடைசி வாய்ப்பு மூங்கில் மரத்தில் கனிஷ்கா ஊசலாடிக் கொண்டிருந்தாள்..! “மயூரி… என்னைக் காப்பாத்து..! ஐ பீல் கிட்டி..! விழுந்துடுவேன் போல இருக்கு..!” –கதறிக்கொண்டிருந்தாள் கனிஷ்கா. “கனிஷ்கா ஏன் மரத்து மேல ஏறினா..?” –திகைத்தாள் மயூரி.! “அவள் ஏறலை..! அவள் செய்த பாவங்கள் அப்படியே ஓங்கி வளர்ந்து அவளை அந்த நிலைக்குக் கொண்டு போயிடுச்சு..!” –புன்னகைத்தான் குகன்மணி. “என்ன சொல்றீங்க..? எனக்குப் புரியலை..” “அவள் தொங்கிகிட்டு இருக்கிறது, Bambusoideae- னு மலேசியா மலைகள்ல விளையற மூங்கில் மரம். […]Read More
சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு. காலம் கெட்டுக் கிடக்கும்மா! எப்பவும் ஆறு மணிக்கெல்லாம் டாண்னுன்னு வந்துடுவா.” “இன்னிக்கு வேலை ஜாஸ்தியா இருந்திருக்கும் அத்த! ஆமா.. பிரியா எங்க போயிருக்கா? இன்னும் காணலை?” “மொட்டை மாடியில் விளக்கு எரியுதே. அங்க உட்கார்ந்து […]Read More
காலையில் எழும்போதே சோர்வாக உணர்ந்த முகேஷ், காபி குடித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான். உள்ளேயிருந்து வந்த அப்பா சோபாவில் அவன் அருகில் அமர்ந்து கொண்டே ..”ஏண்டா!…ஏதாவது பிரச்னையா”? என கேட்க பகீரென்றது முகேஷிற்கு… அவசர அவசரமாக “அதெல்லாம் ஒண்ணுமில்லையே… ஏன்ப்பா!..” என்றான் தனது அதிர்ச்சியை சற்றுமே வெளியே காட்டிக் கொள்ளாமல்… “இல்லை…இப்பெல்லாம் எப்ப வர்ற..எப்ப போறேன்னு கூட தெரியமாட்டேங்குது. வீட்லே யாருகிட்டயும் சரியா பேசமாட்டேங்குற… எப்பவும் எதையாவது யோசிச்சிகிட்டே இருக்குற மாதிரி தெரியுதே “… “ஆபிஸ்ல கொஞ்சம் அதிக […]Read More
“குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக் கொழுந்தாகி அதுசமயக் கூத்தும் ஆடி நின்றாயே மாயை என்னும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார்?” தாயுமானவர் பாடலை சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்து உரக்கப் பாடிக் கொண்டிருந்தார் நீலகண்டக் குருக்கள். விபுலானந்தன் அவரின் அருகே அமர்ந்து அப்பாடலை உள்வாங்கிக் கொண்டிருக்க.. குளம் தூர்வாரும் பணி எந்த அளவு இருக்கிறது என்று பார்க்க வந்த மாணிக்கம்.. “என்ன குருக்களய்யா? உங்க உறவா இந்தத் தம்பி. வடிவழகி கல்யாணம் பண்ணிப் போனதில் […]Read More
அன்றே சிவகாமி பெரியம்மாவைச் சந்தித்து, தன் தாயிடம் சொன்ன அனைத்து விபரங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்லி முடித்த சுமதி, “எனக்கென்னமோ நிச்சயம் இந்த மெத்தேடு ஒர்க் அவுட் ஆகும்!ன்னு தோணுது பெரியம்மா” என்றாள். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டு விட்டு, “சுமதி…என் பொண்ணு குணமடையணும் என்பதற்காக நீ எடுக்கற முயற்சிகளைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தாலும்.,..இன்னொரு பக்கம் சிரிப்பாயிருக்கும்மா…” என்றாள் சிவகாமி பெரியம்மா. “ஏன் பெரியம்மா அப்படிச் சொல்றீங்க?” “பின்னே என்னம்மா?…ஆவி நட்பு…அதுஇதுன்னு எதையோ பண்ணி…பேய் […]Read More
-அமானுஷ்ய தொடர்- பாம்புகளைப் பற்றி அதர்வண வேதத்தில் சில முக்கியமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.அதர்வண வேதம் பாம்புகளை ‘அழகிய கயிறு’ என்று வர்ணிக்கிறது.கிராமங்களில் இன்றளவும் நாக பாம்பினை காண நேர்ந்தால் “அதோ பெரிசு போறதாக்கும்” என்று பயபக்தியுடன் தான் கூறுவார்கள். பழங்காலத்தில் பாம்பின் தலையில் வளரும் மாணிக்கக்கல் நஞ்சை முறிக்கும் என்று மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். தொல்காப்பியச் சொல்லதிகார உரையில்,சேனாவரையர் “பாம்புண்ணிக்கல்” எனும் ஒரு கல் அந்த காலத்தில் விற்கப்பட்டதாகக் கூறுகின்றார். அது பாம்பின் நஞ்சை முறிக்கும் […]Read More
அந்த மருந்து பாட்டிலுக்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை!. வாகினி சிறு குழந்தை என்பதினாலும், தாய்-தகப்பனை இழந்தவள் என்பதாலும் நீதிமன்றம் அவளுக்குப் பெரிதாகத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை. ஒரு பெண் இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் வயது, காலம் வரும் வரை வாகினியை ‘ஆதரவற்ற அரசுக் பெண் குழந்தைகள் காப்பகத்தில்’ இருக்க வேண்டும் என்று வாகினிக்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன்படி வாகினி காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்தை விடவும் அந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள் அரசுக் காப்பகம் […]Read More
12. சால்வை ட்ரெயினில் கொடுக்கப்பட்டிருந்த சால்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கலிவரதனும் காமுப் பாட்டியும் அமர்ந்திருந்தார்கள். “நமஸ்காரம்” என்றவாறே உள்ளே நுழைந்தார்கள் தர்மா, தன்யா, தர்ஷினி. கலிவரதன், காமுப் பாட்டி இருவரும் தங்கள் கேபினிலேயே அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டதால் இங்கே வந்திருக்கிறார்கள். “வாங்கோ” என்றாள் காமுப் பாட்டி. கலிவரதன் லேசாகத் தலையை மட்டும் அசைத்தார். ஆரம்ப அறிமுகங்கள் முடிந்ததும் “சுப்பாமணி – அவரைப் பற்றிச் சொல்லுங்கோ” என்று கேட்டுக் கொண்டாள் தன்யா. காமுப் பாட்டி ஏதோ பேச […]Read More
- அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 01 புதன்கிழமை 2024 )
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!
- மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!
- தமிழ்நாடு மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..!
- வரலாற்றில் இன்று ( 30.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 30 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )
- சர்வதேச நடன தினமின்று