காரை நிதானமாக உள்ளே செலுத்தி கிளவுட் 9 ஆஸ்பிடலுக்குள் நுழைந்தான் முகேஷ். ரிசப்ஷனில் சென்று விசாரிக்க, பையனின் பெயரைக் கேட்டார்கள். அப்போது தான் நினைவிற்கு வந்தது அவசரத்தில் அந்த பையனின் பெயரை கூட இதுவரை கேட்டு கொள்ளவில்லையே என உறைத்தது. அம்ரிதாவை தொடர்பு கொண்டு கேட்டான். “ரித்திஷ்” என சொல்லிவிட்டு அறை எண் 152 ல் நுழைந்தான். “பரவாயில்லையே வரமாட்டேன்னு நினைச்சேன்… வந்துட்டியே!…” என்றாள் அம்ரிதா நக்கலாக… பதிலேதும் சொல்லாமல்….”என்ன ஆச்சி …எதுக்கு என்னை கூப்ட்டே” என […]Read More
வாசுகி அங்கிருந்தே க்ருஷ்ணாவுக்கு ஃபோன் செய்து, அழுது கொண்டே விவரம் சொல்ல, க்ருஷ்ணா துடித்துப் போனான்! “நீ உடனே வீட்டுக்கு வா! என்ன செய்யலாம்னு உடனே நடவடிக்கை எடுக்கணும்! சீக்கிரம் வா!” அரை மணி நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வர, வாசுகி கதறி அழுது, “ குழந்தைக்கு ஏதாவது ஆபத்துனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்!” “ இதப்பாரு இப்ப டயலாக்ஸ் முக்கியமில்லை! உடனடியா போலீஸ்ல புகார் தரணும்! குழந்தையை யாரோ கடத்தியிருக்காங்கனு தோணுது எனக்கு!” “என்ன […]Read More
இராமநாதபுரம் சமஸ்தானத்தை செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் . யாரிந்த செல்ல முத்து விஜயன் ? அரசன் கிழவன் ரகுநாத சேதுபதியின் தங்கை உத்திரகோசமங்கை . இவளின் இளைய மகன் முத்து விஜயன். இவரின் இயற்பெயர் திருவுடையார் தேவர் மனைவி அகிலாண்டேஸ்வரி தம்பதியருக்கு வாரிசு இல்லாததால் ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து செல்லமுத்து என்று பெயரிட்டு வளர்த்தனர். அப்படி என்றால் சேதுபதி என்பது? சேது என்றால் கடல். பதி என்றால் […]Read More
16. காப்பிட்ட பெட்டி “லாக்கர்ஸ்” என்றாள் ஸ்ரீஜா. “இதை நான் முதலிலேயே யோசிச்சிருக்கணும்.” தன்யாவும் தர்ஷினியும் மௌனமாக அவள்கூட நடந்தார்கள். “அதுதான் மறைவானது, அதுதான் பாதுகாப்பானது, அதுதான் நீங்க தேடாதது” – தொடர்ந்தாள் ஸ்ரீஜா. தர்மா சற்றுப் பின்னால் நடந்தான். அவன் கண்கள் பரபரவென்று அலைந்தன. எல்லோரும் டைனிங் காரில் இருக்கிறார்கள், கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும்… தன்யா கொலைகாரனை நெருங்கிவிட்டாள் என்ற செய்தி இதற்குள் அந்த நபருக்கு எட்டியிருக்கும். பொறியில் அகப்பட்ட எலி நார்மலாக நடந்துகொள்ளாது. அங்குமிங்கும் […]Read More
4. மாவலிவாணராயன் பாண்டியர்களின் மதுரை நகரம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தலைநகரம். சோழர்களும், சேரர்களும் பாண்டியப் பேரரசின் கீழ் அடிபணிந்து விட்டதின் விளைவுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைநகரமாக மதுரைக்கு முடி சூட்டியது. அதுமட்டுமின்றி பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட பாண்டியர்களது மதுரை நகரமானது தமிழகத்தின் பெரும் வாணிபத் தளமாகவும் செயல்பட்ட வண்ணம் இருந்தது. அல்லங்காடி, பகலங்காடி என இடைவிடாமல் வணிகம் நடந்து கொண்டிருப்பதால் பல நாட்டவரும் மதுரை வீதிகளில் பொருட்களை விற்பது, வாங்குவது எனக் கூட்டம் கூட்டமாகக் […]Read More
அடுத்த வாரத்தில் ஒரு நாள், காலை நேரம். ரெஸ்டாரெண்ட்டில் தனது அறையில் அமர்ந்து லாப்டாப்பில் மூழ்கியிருந்தான் ஆனந்தராஜ். “என்ன நண்பா பிஸியா?” கேட்டவாறே உள்ளே நுழைந்தனர் திருமுருகனும், விஜயசந்தரும். “பிஸியெல்லாம் ஒண்ணுமில்லை!…ஆடிட்டர் ஸ்டேட்மெண்ட் அனுப்பியிருந்தார்…அதைத்தான் பார்த்திட்டிருந்தேன்” லாப்டாப்பை மூடியபடி சொன்னான் ஆனந்தராஜ். “என்ன சொல்லுது ஆடிட்டர் ஸ்டேட்மெண்ட்?” விஜய்சந்தர் கேட்க, “வழக்கம் போல் லாபக் கணக்குதான்!…அதிலும் இந்த வருஷம் போன வருஷத்தை விட இரு மடங்கு லாபம்” “வாவ்…பாராட்டுக்கள் ஆனந்த்” என்று இருவரும் சொல்ல, “டேய்…என்ன என்னை […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் கனவில் வந்தால் என்னன்ன பலன் என்பதை இதற்கு முந்தைய அத்தியாயங்களில் “நாக சாஸ்திர ஏடுகளின்” மூலம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நாகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை மேலும் விளக்கிக் கூறுகிறேன். அவை, 1. ஒரு நாகப்பாம்பு படமெடுத்த நிலையில் ஒருவரின் கழுத்தை சுற்றுவது போல் கனவு கண்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். மிகப்பெரிய செல்வ செழிப்பு ஏற்படும். 2. ஒருவரின் உடலையோ அல்லது காலையோ நாகம் சுற்றுவது போல் கனவு […]Read More
அத்தியாயம் – 3 “யாருய்யா இது…?” ராம்குமாரின் குரலில் எரிச்சல் தென்பட்டது. “சார், சதாசிவம் சொன்ன ஆளு இவன் தான்.” “எங்க இருந்துய்யா பிடிச்சுட்டு வரீங்க… எங்கயாவது வெளியூருக்கு தப்பிச்சு போகப் பார்த்தானா…?” “இல்லை சார்! துர்கா காலனியில தான் இருந்தான். நாங்களும் துர்கா காலனியில தேடிப் பாத்துட்டு, பஸ் ஸ்டாண்டு பக்கம் போய் பாக்கலாம்னு நெனைச்சுட்டு கெளம்பினோம். ஆனா, அங்கேயே தான், ஒரு பாழடைஞ்ச மண்டபத்துல ஒளிஞ்சிட்டு இருந்தான்.” கான்ஸ்டபிளின் பதிலைத் தொடர்ந்து, காத்தவராயனைப் பார்த்தார் […]Read More
“ என்னை பற்றி நீ என்னடா சொல்லுவே?” “கொலைகாரன்” சிதம்பரத்தின் ஒற்றை சொல், பூதத்தைத் தூக்கி ஆகாயத்தில் வீசியது! சட்டென சுதாரித்துக்கொண்ட பூதம், “ என்ன உளர்ற? நான் யாரை கொலை செஞ்சேன்? ஒரு பெரிய மனுஷனை, உனக்கு சம்பளம் தர்ற முதலாளியை, நீ டாமேஜிங்கா பேசறே! இதுக்காக உன் மேல மான நஷ்ட வழக்குத் தொடர என்னால முடியும்!” “ செய்! உன் மனைவி ராஜலஷ்மி அம்மா, விபத்துல இறந்ததா ஊரை நீ நம்ப வச்சிருக்கே! […]Read More
3. கயல் சகோதரிகள் பெரும் மீசையும், அடர்ந்த பிடரி முடிகளும், பலத்த மேனியையும் கொண்ட வாணாதரையார் காலிங்கராயர் பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆட்சி செய்யும் பலரில் குலசேகர பாண்டியனுக்கும் பாண்டிய அரசுக்கும் மிக நெருங்கியவர். எந்தளவு நெருங்கியவர் என்றால் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நன்மைக்காகப் பல ஆலயங்களை எழுப்பி மன்னனது மனதில் சிறப்பிடத்தைப் பிடித்து வைத்திருப்பவர். அப்படிப் பாண்டிய நாட்டில் பெரும் செல்வாக்கினைக் கொண்ட காலிங்கராயர் அந்த இரவுப் பொழுதில் களங்கனது ஒளியின் […]Read More
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்
- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 26.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 26 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2024 )
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!