ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 12,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில், தற்போது 83 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டும் தறுவாயில் உள்ளதால், காவிரி ஆற்றில் கடந்த 13ம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் காவிரி ஆற்றல் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுவதால் கடந்த 14ம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4,500 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.  ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஐந்தருவி, பெரியபாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  நேற்று மாலை வரை விநாடிக்கு 12,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...