காலையில் எழும்போதே சோர்வாக உணர்ந்த முகேஷ், காபி குடித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான். உள்ளேயிருந்து வந்த அப்பா சோபாவில் அவன் அருகில் அமர்ந்து கொண்டே ..”ஏண்டா!…ஏதாவது பிரச்னையா”? என கேட்க பகீரென்றது முகேஷிற்கு… அவசர அவசரமாக “அதெல்லாம் ஒண்ணுமில்லையே… ஏன்ப்பா!..” என்றான் தனது அதிர்ச்சியை சற்றுமே வெளியே காட்டிக் கொள்ளாமல்… “இல்லை…இப்பெல்லாம் எப்ப வர்ற..எப்ப போறேன்னு கூட தெரியமாட்டேங்குது. வீட்லே யாருகிட்டயும் சரியா பேசமாட்டேங்குற… எப்பவும் எதையாவது யோசிச்சிகிட்டே இருக்குற மாதிரி தெரியுதே “… “ஆபிஸ்ல கொஞ்சம் அதிக […]Read More
“குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக் கொழுந்தாகி அதுசமயக் கூத்தும் ஆடி நின்றாயே மாயை என்னும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார்?” தாயுமானவர் பாடலை சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்து உரக்கப் பாடிக் கொண்டிருந்தார் நீலகண்டக் குருக்கள். விபுலானந்தன் அவரின் அருகே அமர்ந்து அப்பாடலை உள்வாங்கிக் கொண்டிருக்க.. குளம் தூர்வாரும் பணி எந்த அளவு இருக்கிறது என்று பார்க்க வந்த மாணிக்கம்.. “என்ன குருக்களய்யா? உங்க உறவா இந்தத் தம்பி. வடிவழகி கல்யாணம் பண்ணிப் போனதில் […]Read More
அன்றே சிவகாமி பெரியம்மாவைச் சந்தித்து, தன் தாயிடம் சொன்ன அனைத்து விபரங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்லி முடித்த சுமதி, “எனக்கென்னமோ நிச்சயம் இந்த மெத்தேடு ஒர்க் அவுட் ஆகும்!ன்னு தோணுது பெரியம்மா” என்றாள். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டு விட்டு, “சுமதி…என் பொண்ணு குணமடையணும் என்பதற்காக நீ எடுக்கற முயற்சிகளைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தாலும்.,..இன்னொரு பக்கம் சிரிப்பாயிருக்கும்மா…” என்றாள் சிவகாமி பெரியம்மா. “ஏன் பெரியம்மா அப்படிச் சொல்றீங்க?” “பின்னே என்னம்மா?…ஆவி நட்பு…அதுஇதுன்னு எதையோ பண்ணி…பேய் […]Read More
-அமானுஷ்ய தொடர்- பாம்புகளைப் பற்றி அதர்வண வேதத்தில் சில முக்கியமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.அதர்வண வேதம் பாம்புகளை ‘அழகிய கயிறு’ என்று வர்ணிக்கிறது.கிராமங்களில் இன்றளவும் நாக பாம்பினை காண நேர்ந்தால் “அதோ பெரிசு போறதாக்கும்” என்று பயபக்தியுடன் தான் கூறுவார்கள். பழங்காலத்தில் பாம்பின் தலையில் வளரும் மாணிக்கக்கல் நஞ்சை முறிக்கும் என்று மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். தொல்காப்பியச் சொல்லதிகார உரையில்,சேனாவரையர் “பாம்புண்ணிக்கல்” எனும் ஒரு கல் அந்த காலத்தில் விற்கப்பட்டதாகக் கூறுகின்றார். அது பாம்பின் நஞ்சை முறிக்கும் […]Read More
அந்த மருந்து பாட்டிலுக்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை!. வாகினி சிறு குழந்தை என்பதினாலும், தாய்-தகப்பனை இழந்தவள் என்பதாலும் நீதிமன்றம் அவளுக்குப் பெரிதாகத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை. ஒரு பெண் இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் வயது, காலம் வரும் வரை வாகினியை ‘ஆதரவற்ற அரசுக் பெண் குழந்தைகள் காப்பகத்தில்’ இருக்க வேண்டும் என்று வாகினிக்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன்படி வாகினி காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்தை விடவும் அந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள் அரசுக் காப்பகம் […]Read More
12. சால்வை ட்ரெயினில் கொடுக்கப்பட்டிருந்த சால்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு கலிவரதனும் காமுப் பாட்டியும் அமர்ந்திருந்தார்கள். “நமஸ்காரம்” என்றவாறே உள்ளே நுழைந்தார்கள் தர்மா, தன்யா, தர்ஷினி. கலிவரதன், காமுப் பாட்டி இருவரும் தங்கள் கேபினிலேயே அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டதால் இங்கே வந்திருக்கிறார்கள். “வாங்கோ” என்றாள் காமுப் பாட்டி. கலிவரதன் லேசாகத் தலையை மட்டும் அசைத்தார். ஆரம்ப அறிமுகங்கள் முடிந்ததும் “சுப்பாமணி – அவரைப் பற்றிச் சொல்லுங்கோ” என்று கேட்டுக் கொண்டாள் தன்யா. காமுப் பாட்டி ஏதோ பேச […]Read More
அருள் பட்டறையில், பரபரப்பாக செயல் பட்டுக்கொண்டிருக்க, சிதம்பரம் உள்ளே நுழைந்தார்! அருள் எழுந்து வந்து வரவேற்று, அவரை உட்கார வைத்தான். “ காஃபி ஏதாவது சொல்லட்டுமா சார்?” “ வேண்டாம் தம்பி! ஒரு மாதிரி பதட்டமா இருக்கு!” “ ஏன்? பாரதியை, எங்கப்பா, மருமகளா ஏத்துக்கறேன்னு சொன்ன முதல் உங்களுக்கு பதட்டம் கூடிப்போச்சா? எதிராளிகளை பதட்டப்பட வச்சு, அதன் காரணமா அவங்களை பலவீனமாக்கி, தோற்க வச்சு, தான் ஆட்டத்துல ஜெயிக்கறது எங்கப்பாவோட ராஜ தந்திரமாச்சே! சரி, என்ன […]Read More
“வாங்கோ! “சிவமலர், என்னாச்சும்மா?” என்று பதறிக் கொண்டு ஓடிவந்தாள் கற்பகம். பின்னாலேயே நந்தினி. “தூங்கிப் போயிட்டியா? ஏதாவது கனவு, கினவு கண்டியா? அதே நாகம் வர கனவா? அப்போ ஏன் அண்ணான்னு கத்தின?” கற்பகம் ஏதேதோ கேட்டுக் கொண்டு போக, சிவமலர் பிரமை பிடித்தவள்போல் அமர்ந்திருந்தாள். “அத்தை, கொஞ்சநேரம் அவளை எதுவும் கேட்காதீங்க. நான் போய் அவளுக்குக் காப்பி கொண்டுவரேன்” என்றாள் நந்தினி. பயந்துகொண்டு அருகில் வரப் பார்த்த பிரியாவையும் மயூவையும் கண்களாலேயே அப்பால் போகச் செய்தாள். […]Read More
41. திரிசங்கு சொர்க்கம் மலையுச்சியில் கனிஷ்கா அரங்கேற்றியிருந்த பயங்கரத்துக்குச் சாட்சியாக தலைகுனிந்து மூங்கில் மரங்கள் அமைதியுடன் நிற்க, அவற்றின் மலர்களில் இருந்து பனித்துளிகள் வழிய, அந்த மரங்கள் மௌனமாக மிதுனுக்குக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொண்டிருந்தன. விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரியைப் போன்று, மெதுவாக எட்டிப் பார்த்தான் சூரியன். சூரிய கிரணங்கள் போகர் பள்ளியின் வாயில் வழியாக குகைக்குள் எட்டிப்பார்த்து, இன்னமும் மூன்றாவது நவபாஷாணச் சிலையின் முன்பாக தியானத்தில் இருந்த மயூரியைத் தட்டி எழுப்பியது. ‘இப்படியும் ஒரு பக்தியா?’ […]Read More
“வாங்கோ! நஞ்சுண்டனைத் தரிசிக்க வந்தேளா?” குருக்களின் கேள்வியில் கலைந்த விபுலானந்தன் “ஆ… ஆமாம்” என்று தடுமாறினான். “பட்டணத்திலிருந்து வராப்ல இருக்கு! இந்தப் பட்டிக்காட்டுக்கும் வரணும்னு தோணித்தே! ஏதாவது பரிகாரத்துக்காக வந்திருக்கேளோ? விஷபயம் ஏதாவது இருக்கா? ராகு, கேது தோஷம் ஏதாவது…” பேசிக்கொண்டே வெளிமண்டபத்தில் இருந்த ஒரு விளக்கை ஏற்றிக் கையில் எடுத்துக் கொண்டார் நீலகண்ட குருக்கள். விபுலானந்தனுக்குச் சிரிப்பு வந்தது. “இல்லைங்க ஐயா, நான் எனக்காக வரலை. சிவனுக்காகத்தான் வந்தேன்” என்றான். வெளிமண்டபத்தின் வழியே நடந்து பிரமாண்ட […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்