கோபம்

கோபத்தின்‌ கூர்மையான ஆயுதம்‌ வேகமான வார்த்தைகள்‌ என்றால்‌… கோபத்தின்  மிகச் சிறந்த கேடயம்‌ மௌனம் …

பெண்‌

பெண்‌ குழந்தையா என்ற  கேள்வியுடன்‌  பிறக்கிறாள்‌ பெண்‌ சிறுமியாய்‌ சிறகடிக்கும்‌ வயதில்‌ பருவம்‌ எய்தி ஆச்சிரியங்களையும்‌ அவஸ்தைகளையும்‌ கடக்கிறாள்‌ பெண்‌ குமரியாய்‌ படிப்பில்‌ பதிந்து நட்புகளுடன்‌ மகிழ்ந்து கவலை மறக்கிறாள்‌ பெண்‌ கன்னியாய்‌ கல்யாண பந்தத்தில்‌ கண்ணீருடன்‌ பிறந்த உறவுகளையும்‌ புண்கையுடன்‌…

நம்பிக்கை

கவலைகள்‌ புதைக்கும்‌ போது விதைகளாவோம்‌… கண்ணீரில்‌ மூழ்கும்‌ போது இலைகளாவோம்‌… தோல்விகள்‌ சாய்க்கும்‌ போது வேர்களாவோம்‌… சூழ்ச்சிகள்‌ சூழும்‌ போது முட்களாவோம்‌… மகிழ்ச்சி மணம்‌ வீசும்‌ போது மலராவோம்‌…

தண்ணீர்‌!

இயற்கையின்‌ இலவச பரிசு இன்றைய வியாபாரத்தின்‌ தலைவன்‌ ஆகி விட்டது ஒட்டகமும்‌ ஓடை நீரை விட்டு ஒப்பனை பூசிய நீரை குடிக்கும்‌ கற்பனை வந்தாகிவிட்டது தவித்த வாய்க்கு இல்லாத தண்ணீர்‌ தரம்‌ கெட்ட குளிர்பானத்திற்கு தாராளமாக தந்தாகிவிட்டது பணகாரன்‌ பாட்டில்‌ நீரோடு…

நீ என்பதால்!

மெழுகாய் உருகுவேன் நீ என் ஒளி என்பதால் நிலவாய் வளர்வேன்  நீ என் பௌர்ணமி என்பதால் மலராய் மலர்வேன் நீ என் வாசம் என்பதால் தென்றலாய் தீண்டுவேன் நீ என் சுவாசம் என்பதால் மேகமாய் வருவேன் நீ என் தாகம் என்பதால்…

பெண்ணே !

பெண்ணே பால் குளத்தில் விழ்ந்த திராட்சையாய் உன் கண்ணில் மிதக்கிறேனடி பெண்ணே   உன் சுவாசம் தீண்டும் காற்று மற்றும் வாசனைத் திரவியமாய் மணக்குதடி பெண்ணே   தமிழில் நிறைய வார்த்தைகள் உள்ளதென்று மௌன மொழி பேசும் இதழுக்கு சொல்லடி பெண்ணே…

புதுமைப் பெண்ணே !

பெண்ணே நெஞ்சம் பதைபதைத்து துடிக்கிறது காமுகனை அணுஅணுவாய் அடித்துக் கொன்றாலும் ஆத்திரம் அடங்கப் போவதில்லை ஆனாலும் பெண்ணே நீ விழித்துக்கொள் மாய வார்த்தைகளில் மயக்கம் கொள்ளாதே பார்வையையும் புத்தியையும் கூர்மையாக்கு பாதங்களின் ஒவ்வொரு அடியிலும் தாய் தந்தையை சற்று நினைத்துக் கொள்…

அக்னிசிறகுகள்

இரத்தத் திட்டுக்களாய் !  கருவில் திரண்டுவிட்டேன் அசைவையும் மூச்சையும் சுவாசித்து கருவறை இருளில் உருவாய் மாறிய நேரமே ! என் குறி குறித்த சோதனையிலேயே கூசித்தான் போனேன் ?! பிறப்பிலேயே குருதி பூசியதாலோ  என்னவோ தொடர்ச்சியாய் மாதாந்திர மூன்று நாட்களை நிரந்தமாக்கியது…

ஆசிபா போன்று பாலியல் சிக்கிய குழந்தைகளை நினைந்து எழுதியது

ஆசிபா போன்று பாலியல் சிக்கிய குழந்தைகளை நினைந்து  எழுதியது எப்படி வலித்திருக்குமோ உனக்கு என்னவெல்லாம்  செய்திருப்பார்களோ உன்னை  பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய் கொடூரர்களின் தொடுதலை  நீ உணர்ந்திருக்கமாட்டாய்  அவர்களை நீ அண்ணனென்றோ அங்கிளென்றோ மட்டும் தான்  அழைத்திருக்க முடியும்  தின்பண்டங்களோ…

கருப்பு நிலவன் காமராஜர்

இது   புகழ்   பாட்டு புகழவேண்டிய  பாட்டு  கருப்பு நிலவன்  தியாயகத்தை  கவிதையில் சொல்லும்  இது காதல் கலந்த  புகழ் பாட்டு .. சமுத்திரத்தின்  மேனியில்  உறவாடி கலக்கும்  முகில் போல  என் பாட்டு கருப்பு நிலவனை  புகழ்ந்து  நிற்கும் … காதலியின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!