அள்ளி வா மழையை!

அருவியாக  ஆர்பரித்தது வானம் 

ஆனால்  சிறுதுளிகூட  அள்ளமுடியவில்லை, 

இங்கு வடிகால் வசதி ஏதும் செய்யப்படவில்லை. 


மழையே !மழையே !வா என்றனர் 

அதற்கு எந்தவித இடமும் இல்லாமல் 

அவை கலக்கும் இடத்தில் வீடூகள் ஏரிகள் குளங்கள் இருக்கும் இடத்தில் நாம் !!! 


மழை பெரும்கண்ணீரை வடிகிறது, 

அதனால் நாமும் கண்ணீரை வடிகிறோம். 

மழையே நீ வந்து தங்கஇடமில்லாமல் கோவிலில் உனக்காக இத்தனை பூசைகளா? 


உனக்கான  முதல் வேண்டூதல் வடிகால் வசதி, ஏரிகளில் தூர்வாரல், 

நீ இப்போது ஆனந்தகண்ணீரில் அள்ளி வா மழையை !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!