Tags :க்ரைம் த்ரில்லர்

தொடர்

ஒற்றனின் காதலி | 3 | சுபா

நான் இரண்டாவது முறையாகத் தக்கலை வந்து சேர்ந்த போது, நான் இளைஞனாக மாறியிருந்தேன். என் இருபத்தாறு வயது முகத்தில் அடர்த்தியான மீசை என்பது பெண்களைப் பயமுறுத்தும். வயதைக் கூட்டிக் காட்டும் என்பதற்காக, மீசையைச் சுத்தமாக வழித்து விட்டேன். முன்பு வந்ததற்கும், இப்போது வந்ததற்கும் இடையில் ஒரு மாதம். முப்பது முழு நாட்கள். இந்த நாட்களில் நான், முகத்திற்குக் கிரீம் எல்லாம் தடவி ஒரு மாதிரி, பளபளப்பாக என் முகத்தை மாற்றி இருந்தேன். இப்போதைய ஸ்டைலில் பின்னந்தலை முடியை […]Read More

தொடர்

ஆசையின் விலை ஆராதனா | 2 | தனுஜா ஜெயராமன்

சைரன் ஒலித்தபடி போலீஸ் ஜீப் ‘மில்லேனியம் ஸ்டோன்’ காம்பவுண்டில் நுழைந்தது. ஏற்கனவே வந்திருந்த ஆம்புலன்ஸ் ஓரமாய் நின்றிருந்தது. அங்காங்கே ‘குசு குசு’வெனப் பேசியபடி ப்ளாட்டில் வசிப்பவர்கள் காரிடரில் நின்றுகொண்டிருக்க… சிலர் பால்கனி வழியாக மேலேயிருந்து பீதியுடன் எட்டிப் பார்த்து கொண்டிருந்தனர். ஜீப்பிலிருந்து குதித்து இறங்கினாள் அனாமிகா. இளவயதின் துடிப்பு அவரது முகத்தில் நடையில் தெரிந்தது. நடிகை அனுஷ்காவிற்கு யூனிபார்மை மாட்டியது போல் இருந்தாள் அனாமிகா. “யார் இங்க செகரெட்டரி..?” “நான் தாங்க..” என வந்து நின்றார் விக்னேஷ்வரன். […]Read More

தொடர்

கண்ணே, கொல்லாதே | 2 | சாய்ரேணு

லாக்கப்பில்… “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ்! இந்தக் கேஸில் உனக்கு டிஎஸ்பி ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும் பார்” என்றாள் தன்யா. முதல்நாள் கமிஷனரிடம் பேசியபோது இருந்த உற்சாகம் இல்லை போஸுக்கு. அலுப்பாகத் தெரிந்தான். “கேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்க் இல்லைன்னு கமிஷனர், ப்ராசிக்யூட்டர் எல்லோரும் நினைக்கறாங்க. ஆனா இவன் பேரில் பப்ளிக் கோபமா இருக்கறதால, எந்த லாயரும் கௌதமுக்காக வாதாடத் தயாரா இல்லை” என்றான். அதோடு அந்தக் கேஸை விட்டுவிட்டு வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தான். பத்து நிமிடங்கள் கழிந்திருந்தபோது மந்திரம் […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 2 | சுபா

போன வருடம் வரை யாக்கோபு என்றும், போன மாதம் வரை யோவான் என்றும், நேற்று வரை தாவீது என்றும் பெயர் வைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு மாற்றி விட்டேன். காரணம் நான் போகப் போகிற ஏரியா அப்படி. இன்றையிலிருந்து என் பெயர் சிவரஞ்சன். பெயர் பரவாயில்லையா? ஓ.கே.வா? தாங்க்ஸ். நான் உங்கள் ஊருக்கு வந்தால், ஆயிரம் பேருக்கு நடுவில் என்னைத் தனியாக அடையாளம் காண முடியும். காரணம், என் முகத்து ஒளிர் தேஜஸ். அருட்ஜோதி. இந்த தேஜஸையும், அருட் […]Read More

தொடர்

ஆசையின் விலை ஆராதனா | 1 | தனுஜா ஜெயராமன்

சென்னை விமான நிலையம். அதிகாலை. மார்கழி மாதக் குளிர் ஊசியாய் உடலை ஊடுருவ, இரு கைகளையும் தேய்த்து வெப்பத்தை உண்டாக்கிக் கன்னத்தில் வைத்துக்கொண்டே போர்டைப் பார்த்தார் வெங்கடாச்சலம். ப்ளைட் அரைமணிநேரம் லேட்… “ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வந்திருக்கலாம் விஜி”, என்று அங்கலாய்த்தார் தனது மனைவியிடம். இருவரும் காத்திருப்புக்காகப் போட்டிருந்த சேரில் அமர்ந்தனர். அங்குமிங்கும் நாய்கள் சுற்றி வர, அவ்வப்போது அவற்றின் “லொள்” குரைப்பு சத்தம். சற்று எரிச்சலாக வந்தது வெங்கடாசலத்திற்கு. விஜயலஷ்மிக்கோ பேத்தி ஆத்யாவையும், […]Read More

தொடர்

கண்ணே, கொல்லாதே! | 1 | சாய்ரேணு

1. அரெஸ்ட்! “மிஸ்டர் கௌதம், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்றான் போஸ். கௌதம் விழித்தான். பிறகு மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தான். “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ். இரண்டே நாளில் அக்யூஸ்டைக் கண்டுபிடிச்சுட்டீங்களே! அதோட, இந்தக் கௌதமைக் கம்பிக்குப் பின்னால் வெச்சுப் பார்க்கணும்னு குறைஞ்சது அரை டஜன் இன்ஸ்பெக்டர்கள் விரும்பறாங்க. வெல்டன்” என்றார் கமிஷனர். “தாங்க் யூ சார்” என்றான் போஸ். மனதில் பெருமை நிரம்பியிருந்தது. ஒரு தேர்ந்த குற்றவாளியைப் பிடித்திருக்கிறான்! அதுவும் கொலைக் குற்றத்திற்கு! “உட்காருங்க. கேஸைச் சுருக்கமா […]Read More

தொடர்

ஒற்றனின் காதலி | 1 | சுபா

டைட்டில் கார்டு போடுவதற்கு முன்… அரசாங்க மருத்துவமனை உறங்கிக் கொண்டிருந்தது. அதன் பெரிய இரும்புக் கதவுகள் திறந்து கிடந்தன. யார் நினைத்தாலும், யானை வந்து தள்ளினாலும் மூடமுடியாதபடி, கதவின் கீழ்ச் சக்கரங்கள் தரையில் அழுத்தமாகப் புதைந்திருந்தன. விபத்து கேஸ்களைக் கவனிக்கும் காஷுவாலிட்டி பிரிவின் வராந்தாவில் குழல் விளக்குகள் மெல்லிய ‘ம்’முடன் எரிந்தன. வராந்தா பென்ச் ஒன்றில் காக்கிச் சட்டை ஆசாமி, அடிபட்டவனைப் போல் படுத்துக் கிடந்தான். அறையில் ஒரு நர்ஸ் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தாள். ஹவுஸ் சர்ஜன் […]Read More