நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!

 நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!

நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியாகியுள்ள நிலையில், திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக கடந்த வாரம் ‘ராயன்’ திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘ராயன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகியுள்ள  ‘ராயன்’ திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

இன்று ஒரு நாள் மட்டும் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் ரசிகர்கள் மேளதாளத்துடனும் தனுஷ் கட்அவுட்டிற்கு பால் அபிஷோகம் செய்தனர்.இந்த திரைப்படத்தின் முதல் சிறப்பு காட்சி இன்று வெளியானது.

இதனைத்தொடர்ந்து, ‘ராயன்’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட திரைப்பட குழுவினர் திரைப்படத்தை காண ரோகிணி திரையரங்கத்திற்கு சென்றனர். மேலும், கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ‘ராயன்’ திரைப்படத்தை பார்பதற்காக இயக்குநர்கள் சசி மற்றும் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...