Tags :குடும்பத் தொடர்கதை

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 9 | தனுஜா ஜெயராமன்

ஹோட்டல் மூன்லைட் இன்டர்நேஷ்னல் என்ற பித்தளை போர்ட் பளபளக்கும் கேட்டில் நுழைந்து காரை பார்க் செய்தான். அம்ரிதா வந்திருப்பாளா? சதிகாரி நிச்சயம் வந்திருப்பாள். இதே வேலையாக அலைபவள் தானே…என நினைத்தபடி உள்ளே நுழைந்தான். ரிஸப்ஷனில் …சோபாவில் அமர்ந்து கண்களால் துழாவினான்… அவளை காணவில்லை… காத்திருந்தான்… ஒரு மணிநேரம் கடந்தும் அவள் வராதது எரிச்சலாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் நெருப்பு மேல் நிற்பது போல் இருந்தது… கிளம்ப யத்தனித்தவன் சோபாவிலிருந்து எழ… கண்ணாடி டோரை திறந்து கொண்டு அவள் […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 10 | தேவிபாலா

“இன்னும் ஒரு மணி நேரத்துல நீ யாருன்னு உன் குடும்பத்துக்கு ஆதாரத்தோட சொல்றேன்..!” சிதம்பரத்துக்கு மூச்சே நின்றது! பூதத்தின் குரலில் இருந்த தீவிரம், முகத்தில் இருந்து தெறித்த அனல், அந்த கண்களில் மின்னிய வெறி, எல்லாமே சிதம்பரத்தை மிரள வைத்தது..! முப்பது வருஷ காலத்தில் பூதத்தைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர் சிதம்பரம்..! இந்த மாதிரி தன்னை பாதிக்கும் வெறி பிடித்த நிமிஷங்களில், பூதம் எந்த முடிவுக்கும் போகக்கூடிய ஆள்..! தன் மகன், பாரதியைக் காதலிப்பதால் பல விபரீதங்களைச் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 8 | தனுஜா ஜெயராமன்

சாயங்காலம் கிளப்பில்… “டேய்…என்னடா என்னமோ மாதிரி இருக்க..?” என்ற ஹரிஷின் குரலுக்குக் கலைந்தவன்… “ஒரு சின்ன பிரச்சினைடா… ஒரே குழப்பமா இருக்கு… உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தான்…” எனத் தயங்கியவன், “டேய் முகேஷ் … என்கிட்ட என்னடா தயக்கம் உனக்கு..? நான் என் வெளியாளா..?” “அதில்லைடா… நான் உன்கிட்ட ஒரு அனானிமஸ் போன்காலை பத்தி சொல்லியிருந்தேன்ல…” “ஆமாம்… யார்ன்னு கேட்டியா..?” “ம்.…” எனச் சற்றுத் தயங்கியவன்… “நாம திருச்சியில இருந்தப்ப எதிர் வீட்ல இருந்தாளே அந்த அம்ரிதா.. […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 9 | தேவிபாலா

பாரதி, அருளிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க, வெளியே பலமாக மழை பெய்து கொண்டிருக்க, அவசரமாக உள்ளே புகுந்த நாலு ஆட்கள், படக்கென ஷட்டரை இழுத்து, கடையை மூடினார்கள்..! அருள் விசுக்கென நிமிர்ந்தான்..! “யாருடா நீங்க..?” “டேய்..! அவளைப் போட்டு தள்ளிட்டு, வந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புங்கடா..!” ஒருவன் சொன்னது தான் தாமதம், அடுத்தவன் ஒரு நீண்ட ஆயுதத்துடன் பாரதியை நோக்கிப் பாய, அடுத்த நொடியே அவன் கை ஆயுதம் தெறித்து அவனும் அலறியபடி தூரப்போய் விழுந்தான். கையில் […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 8 | தேவிபாலா

எதிரே வந்து நின்ற அருளைப் பார்த்ததும் கொலை வெறி கூத்தாட, பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்தார் பூதம்! “உன் கதையை இன்னிக்கே முடிச்சிர்றேன்..!” சொல்லிக்கொண்டே, அவன் கழுத்தைப் பலம் கொண்ட மட்டும் இறுக்க, அருள் சிரித்துக்கொண்டே அவரது கால் விரலைத் தன் பெரு விரலால் அழுத்த, அப்படியே கண்களை இருட்டி, பிடித்திருந்த கை நழுவி, ஒரு பக்கமே மரத்த மாதிரி ஆகி, அப்படியே சரிந்தார் பூதம்..! அவரை விழாமல் தாங்கிப் பிடித்தான் அருள்..! சோபாவில் உட்கார வைத்தான்..! […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 7 | தனுஜா ஜெயராமன்

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. தந்திரமாகத் தான் விரட்டியடிக்கவேண்டும். அதிலும் இது சாதாரணப் பாம்பல்ல. ஆலகால விஷமடங்கிய கொடூரப் பாம்பாயிற்றே என்று கவலைகள் வாட்ட இரவெல்லாம் விழித்தபடி யோசித்துக் கொண்டே படுத்திருந்தவன் விடியற்காலையில் அசந்து தூங்கிப் போனான். அவனை எழுப்ப மனமில்லாத சுதா…சத்தமில்லாமல் எழுந்து கதவை மெதுவாக சாத்திவிட்டுப் போனாள். ஐன்னல் வழியாகச் சூரியன் கட்டில் வரை நேரடியாகச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். வெளிச்சம் கண்களைக் கூசியது. பதறியடித்து எழுந்தவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதைக் காட்டியது. […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 7 | தேவிபாலா

“யார் கிட்டே சவால் விடறேம்மா?” அவர் கண்களில் கேள்வி தொங்க, அவளை விஷமமாக பார்த்தார்! “அந்த வீனஸ், நம்ம க்ளையன்ட் தான்! நம்மை மீறி அவனால எதுவும் செய்ய முடியாது! ஆனாலும் இன்னிக்கு அங்கே தொழிலாளர்களுக்கு சம்பளம் தரலைனா அது நியாயம் இல்லை! மேலும் உன் அஜாக்ரதையால ஆறு லட்சம் போயிருக்கு! அதனால நான் பணம் ரெடியா வச்சிருக்கேன்! நீ கொண்டு போய் குடுத்துடு! அதுக்கு முன்னால இங்கே ஜாயினிங் ரிப்போர்ட் குடுத்து வேலைக்கு சேர்ந்துடு! தவிர […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 6 | தனுஜா ஜெயராமன்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம் எண்ணங்களே நமது செயல்களே நம் தலையெழுத்தை தீர்மானிக்கிறது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக வைப்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது..” என யாரிடமோ மொபைலில் பேசி கொண்டே முகேஷின் வீட்டிற்குள் நுழைந்தான் ஹரிஷ். “வாடா..!” என ஹரிஷை வரவேற்று, “அம்மா காபி குடும்மா..” என உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான் முகேஷ். “வாப்பா ஹரிஷ்..! எப்படியிருக்க..?” என்றபடி காபியை நீட்டினாள். “நல்லாருக்கேன்ம்மா. இன்னைக்கு கடைசி எக்ஸாம்.  […]Read More

தொடர்

அவ(ள்)தாரம் | 6 | தேவிபாலா

பாரதி வெளியே வர, சிதம்பரம் மட்டும் சற்றே கவலையுடன் காத்திருந்தார்! “என்னம்மா சொன்னார் உங்கிட்ட..? கோவப்பட்டாரா..?” “கோவப்பட என்ன இருக்குப்பா..? வேண்டாம்னு சொல்றது என் உரிமை..! அதை கேள்வி கேக்கற அதிகாரம் அவருக்கு இல்லையேப்பா..! நான் கிளம்பறேன்..! சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்..!” சிதம்பரத்தை, பூதம் அழைத்தார். சிதம்பரம் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தார். “ஒக்காருங்க சிதம்பரம்..! உங்க மகள் ரெண்டாவது முறையா என்னை அவமானப்படுத்தறா..!” சிதம்பரம் பேசவில்லை. “உங்களை பற்றி ரொம்ப உயர்வான அபிப்ராயம் வச்சிருக்கா உங்க […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 5 | தனுஜா ஜெயராமன்

குடிவந்த ஒரே வாரத்தில் தனலட்சுமியும், அம்ரிதாவும் மிகவும் நெருங்கி விட்டனர். அம்ரிதாவின் கணவர் சர்வேஷ் டெல்லிக்குக் கிளம்பிவிட, அம்ரிதா குழந்தையுடன் தனியாக இருக்க, தனலட்சுமியும் அவளுக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்யவே இருவருக்குமான நட்பு மேலும் பலப்பட்டு விட்டது. குழந்தை ஷ்ரதா பெரும்பாலும் முகேஷின் வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருப்பாள். சில நேரத்தில் அவளை திரும்ப அழைத்துச் செல்லும் போதும், காபித்தூள், சர்க்கரை என அவசரத் தேவைகளின் போதும் அம்ரிதா அடிக்கடி வீட்டுற்கு வந்து போகும் தருணங்களிலும் முகேஷைப் பார்த்து […]Read More