செல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம்

 செல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம்
செல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்..! கர்ப்பிணி பெண் பரிதாப பலி..!

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் இம்ரான்(30). இவரது மனைவி பரீதா(25). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பின் பரீதா கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 21ம் தேதி அதிகாலையில் பரீதாவிற்கு பிரசவ வலி ஏற்படவே அவரை உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பணியில் மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர்.இதனால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களே பரீதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே பரீதா உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...