பெருமாளோட சாயங்காலம் வீட்டுக்கு வரேன்..

 பெருமாளோட சாயங்காலம் வீட்டுக்கு வரேன்..

மதுரை முத்து ஓபனா சொல்லிட்டாரு.. பெருமாளோட சாயங்காலம் வீட்டுக்கு வரேன்.. கொதிக்கும் இந்துத்துவா

By Hemavandhana

மதுரை முத்துவின் காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. நிகழ்ச்சி ஒன்றில் மதுரை முத்து, இளைஞர்கள் மத்தியில் பேசும் வீடியோ போல தெரிகிறது. இது ஏதோ கல்லூரி விழாவாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

ஆன்மீகம்: இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து பேசும்போது, “ஆன்மீகத்தில் அழகாக சாமி கும்பிடறவங்க இருக்கிறார்கள். இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஸ்பெஷல் அர்ச்சனை வந்துவிட்டது. ஒருத்தர் ரூ.50 கொடுத்தால், உடனே அவருக்கு குங்குமம், விபூதியை கொஞ்சம் அதிகமாக தருவாங்க. ஒருத்தர் ரூ.100 கொடுத்தால், உடனே அவரை கூப்பிட்டு, “இப்படி நேரடியாக நின்னு சாமியை பாருங்க” என்கிறார்கள்.

ஒருத்தர் 200 ரூபாய் கொடுத்தால், கேட்டை திறந்துவிட்டு, “வாங்க உள்ளே வந்து தரிசனம் பண்ணுங்க” என்று கூப்பிடுவார்கள். ஒருத்தர் 300 ரூபாய் கொடுத்தால், “வாங்க, உள்ளே வாங்க, பெருமாள் பக்கத்துல நின்று, பெருமாள்கிட்ட செல்பி எடுத்துக்குங்க” என்கிறார்கள்.

பெருமாள்: ஒருத்தர் 500 ரூபாய் கொடுத்தால், “போனை பெருமாள்கிட்டயே குடுங்க, அவர் செல்பி எடுப்பார் என்பார்கள். ஒருத்தர் 1000 ரூபாய் கொடுத்தார், உடனே அர்ச்சகருக்கு கோபம் வந்துவிட்டது. ஏன் சார் இங்கேயெல்லாம் வர்றீங்க? ஒரு போன் பண்ணியிருந்தீங்கன்னா, பெருமாளை தூக்கிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்திருப்பேன் இல்ல? என்றார் மதுரை முத்து.

மதுரை முத்து பேசப்பேச, அரங்கமே அதிர்ந்தது.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. வீடியோவை பார்ப்பவர்கள், மதுரை முத்துவின் பேச்சை ரசித்து வருகிறார்கள். ஆனால், அதேசமயம், மதுரை முத்துவின் பேச்சு, சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது. முக்கியமாக இந்துத்துவா தரப்பினர், மதுரை முத்து பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்..

நன்றி: ஒன்இந்தியா தமிழ்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...