பூஜா ஹெக்டேவை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்

 பூஜா ஹெக்டேவை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்
பிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்

பூஜா ஹெக்டேவை பார்க்க ரசிகர் ஒருவர் 5 நாட்களாக சாலையோரம் படுத்து தூங்கி காத்திருந்திருக்கிறார்.ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. அவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் பூஜாவை நேரில் பார்க்க அவர் வசிக்கும் மும்பைக்கு சென்றுள்ளாபூஜாவை பார்க்க 5 நாட்களாக காத்திருந்த அவர் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். பாஸ்கர் ராவ் என்கிற அந்த ரசிகர் தனக்காக காத்திருப்பது குறித்து அறிந்த பூஜா அவரை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை பூஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B7VYxbOHLRi/?utm_source=ig_embed

தன்னை பார்க்க மும்பை வரை வந்து 5 நாட்கள் காத்திருந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள பூஜா தன் ரசிகர்கள் இப்படி கஷ்டப்படுவது தனக்கு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.ர். இது குறித்து பூஜா மேலும் கூறியிருப்பதாவது,
நீங்கள் தெருவில் படுத்து தூங்குவதை நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் அன்பை நான் உணர்கிறேன். நீங்களே என் பலம் என்று தெரிவித்துள்ளார். பூஜா அடுத்ததாக பிரபாஸுடன் சேர்ந்து ஜான் படத்தில் நடிக்கிறார். அந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு இத்தாலி மற்றும் ஹைதராபாத்தில் நடக்கிறதாம். தான் இதுவரை கேட்ட ஸ்க்ரிப்ட்டுகளிலேயே ஜான் தான் சிறந்தது என்கிறார் பூஜா. ஜான் படம் முழுக்க முழுக்க காதல் படமாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...