“ரத்தன் டாடா” மருத்துவமனையில் அனுமதி..!

 “ரத்தன் டாடா” மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நள்ளிரவில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்போது அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார்.

நமது நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா. அவருக்கு இப்போது வயது 86.. டாடா சன்ஸ் நிறுவனம் இப்போது இந்தளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால் அதில் ரத்தன் டாடா பங்கு முக்கியமானது.

இதற்கிடையே ரத்தன் டாடாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஐசியூ பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவு 12.30- 1 மணியளவில் ரத்தன் டாடா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருடைய ரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு நள்ளிரவில் குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்தே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். இப்போது வல்லுநர் குழு நிபுணர்கள் குழு அவரது நிலையைக் கண்காணித்து வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...