செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது..!

 செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது..!

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

நாடெங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன.இதில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜுன் மாதம் தேர்தல் காரணமாக ஒரு சில சுங்கச்சாவடிகளில் மட்டும் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. அப்போது 5 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம்தேதி முதல் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் இந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியது வரும் எனச் சொல்லப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...