வரலாற்றில் இன்று (26.08.2024 )

 வரலாற்றில் இன்று (26.08.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஆகஸ்டு 26 (August 26) கிரிகோரியன் ஆண்டின் 238 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 239 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 127 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1768 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தான்.
1795 – திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களினால் முற்றுகைக்குள்ளானது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன.
1920 – ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1942 – உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.
1957 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
1972 – 22வது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது.
1978 – முதலாவது அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக பதவியேற்றார்.
1978 – முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.
1993 – யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
1997 – அல்ஜீரியாவில் 60க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 – திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.

பிறப்புகள்

1880 – கியோம் அப்போலினேர், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1918)
1883 – திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)
1910 – அன்னை தெரேசா, அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1997)
1927 – அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் (இ. 1989)
1933 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)
1934 – ஏ. ஜே. கனகரட்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)
1952 – பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)
1956 – மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி

இறப்புகள்

1723 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (பி. 1632)
1865 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (பி. 1791)

சிறப்பு நாள்

*****

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...