கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!

 கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டா்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  இந்த நிலையில், கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவா்கள் கூறியதாவது:

“பருவ காலங்களில் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்.  அந்த வகையில் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது அது நேரடியாக கண்களை பாதிக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.  இதனை அலட்சியப்படுத்தும் போது பாதிப்பு தீவிரமடைந்து பாா்வைத் திறன் குறைய நேரிடும்.  கடந்த சில வாரங்களாக உலா் விழி,  கண் அழற்சி, புறஊதா கதிா்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமை பாதிப்பு ஆகியவை அதிக அளவில் ஏற்படுகின்றன.

உலர் விழி பிரச்னை கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீா் சுரக்காதபோது  ஏற்படுகிறது.  இதற்கு சொட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கலாம். இளம் சிவப்பு கண் நோய் எனப்படும் கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கண் இமைக்கு உள்ளே அமைந்திருக்கும் திசுவில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படும்போது இத்தகைய பாதிப்பு உருவாகிறது.

அசுத்தமான கைகளால் கண்களைத் தொடாமல் இருப்பதன் மூலம் இதனைத் தவிா்க்கலாம்.  சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிா்வீச்சு பல வகையான கண் நோய்களை விளைவிக்கக் கூடும்.  இந்த கதிர்வீச்சு கண் புரை, விழிப்புள்ளிச் சிதைவு, ஃபோட்டோகரட்டாடிஸ் போன்றவற்றை ஏற்படும்.  இத்தகைய பாதிப்பைத் தவிா்க்க சூரிய ஒளியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடிகளை அணியலாம்.

கோடை காலத்தில் உடலில் நீா்ச்சத்தைக் குறையாமல் வைத்திருக்கும் பானங்களை அருந்த வேண்டும்.  செயற்கை குளிா்பானங்கள், காா்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிா்க்க வேண்டும்.   கணினி,  கைப்பேசிகளை பயன்படுத்துகின்றபோது 20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண் பாதிப்புகளில் இருந்து தவிா்க்கலாம்.

அதாவது, 20 நிமிஷங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து பாா்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை,  20 விநாடிகள் பாா்க்க வேண்டும்.  இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடா்ந்து பாா்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும்.”

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...