இன்றைய ராசி பலன்கள் ( 25 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 25ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 25.04.2024 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.51 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று அதிகாலை 12.48 வரை சுவாதி. பின்னர் விசாகம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக உடல் அசதி உண்டாகும் .உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. துர்கையை வழிபட எதிலும் வெற்றியே ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தொட்டது துலங்கும் நல்ல நாள். காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் உதவிகேட்டு வருவார்கள். நீங்களும் மகிழ்ச்சியுடன் செய்துதருவீர்கள். மாலையில் உறவினர்களுடன் பேசி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியமும் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற் பட்டு நீங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

மிதுன ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். என்றாலும் கைவசம் போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும் என்பதால் பிற செலவுகளில் சிக்கனமும் தேவை. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் தேவையற்ற இனம் தெரியாத சோர்வு ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பது தாமதமாகும். உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் பொறுமை மிக அவசியம். மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள் குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் என்பதால் செலவுகள் குறித்த கவலை இல்லை. உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட அதிக நன்மைகளைப் பெறலாம்.

கன்னி ராசி அன்பர்களே!

குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்னைகள் நீங்கும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளை அல்லது பெண்ணின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்பட லாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். லட்சுமி நரசிம்மரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். ஆனால், குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். நண்பர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும் செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். நண்பர்கள் பணஉதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆஞ்சநேயரை வழிபட நினைத்தவை நிறைவேறும்.

மகர ராசி அன்பர்களே!

முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். குடும்பத்தில் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார் கள். தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

கும்பராசி அன்பர்களே!

முற்பகலில் செயல்களில் சிறு கவனம் தேவை. புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய் தியை பகிர்ந்துகொள்வர். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு வீண் அப வாதம் ஏற்படக்கூடும். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.

மீனராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பிரத்தியங்கிரா தேவையை வழிபட பிரச்னைகள் நீங்கி மன அமைதி உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!