மீண்டும் சென்னை வரும் பிரதமர் மோடி..!

 மீண்டும் சென்னை வரும் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற இருப்பதையொட்டி, சென்னை தியாகராய நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6-வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். நாளை சென்னை வரும் பிரதமர் 2 நாட்கள் தங்கியிருந்து ஆதரவு திரட்டவுள்ளார்.

சென்னை பாண்டிபஜார் பகுதியில் நாளை வாகன பேரணி நடத்தவுள்ள பிரதமர் மோடி, தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை பாஜக வேட்பாளர் பால கனகராஜ், மத்திய சென்னை பாஜக வேட்பாளர்வினோஜ் பி செல்வம் ஆகியோருக்காக வாக்கு சேகரிக்கவுள்ளார்.

இதன் பின்னர் புதன்கிழமை வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தவுள்ளதால், பாண்டி பஜாரில் பகுதியில் பிரதமரின் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். பாண்டிபஜார் மற்றும் தியாகராயநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமரின் வருகையை முன்னிட்டு பாண்டி பஜாரில் நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்து, தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்துவதாக கூறினார்.

மேலும், சென்னை இதுவரை பார்த்திராத பிரமாண்டமான கூட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...