செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையேயான ரயில் சேவை சீரானது..! | நா.சதீஸ்குமார்

 செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையேயான ரயில் சேவை சீரானது..! | நா.சதீஸ்குமார்

செங்கல்பட்டு ரயில் நிலையம்  அருகே இன்று காலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது.  சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழியாக செல்லும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில் சேவை சீராகியுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை இன்று(திங்கள்கிழமை) மாலை மீண்டும் தொடங்கியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...