அத்தியாயம் – 16 எனக்குத் தெரியாம அப்படி எனக்கு என்னதாம்மா நடந்துச்சு? அப்பாவியாய் கேட்கும் மகளை கண் கொட்டாமல் பார்த்தாள் பிருந்தா. எப்படிப் புரிய வைப்பேன் இந்தப் பெண்ணிற்கு? சொன்னால் புரிந்து கொள்வாளா? முதலில் மகளிடம் பேசிப் பார்ப்போம் அவள் போக்கில் விட்டு அவளிடமிருந்தே அவள் வாயைப் பிடிங்கி உண்மை வருகிறதா என்று பார்ப்போம் அப்புறம் அவளிடம் நடந்த உண்மையை கூறுவதா வேண்டாமா என்று முடிவெடுப்போம். எண்ணியவள் மகளை வினவினாள். “ப்ரியா நீ இந்த அம்மா […]Read More
அத்தியாயம்-16 மறுநாள்….. ஏட்டையா வாசலில் நிற்பது அறியாமலே மருதவள்ளியை சத்தம்போட்டுக் கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா. “சொல்றதைக் கேளுடி.மரியாதையா பெரியதனக்கார் வீட்டுக்குப் போயிடு. போதும் பண்ணுன கனக் காரியம். எவனுகளோ அடிச்சுக்கிட்டு நின்னா உனக்கென்னடி.?போனோமா வந்தோமான்னு இல்லாமா சமூக சேவை செய்யப் போயிட்டா.எவஞ்செத்தா உனக்கென்ன. ஆம்புலன்சைக் கூப்பிடுறேன் ஆமவடை சுடுறேன்னு செஞ்ச வேலைக்கு நேத்திக்கு போலிசு வந்து நிக்குது. அக்கம்பக்கம் பேச மாட்டாளுங்களா. நானே உன்னை எப்படி கட்டிக் குடுத்து கரையேத்தப்போறேனோன்னு வவுத்துலே நெருப்பை கட்டிக் கிட்டுக் கிடக்கேன் […]Read More
அத்தியாயம் – 1 அனாமிகா இறப்பதற்கு முன் நடந்த கதை இது: அனாமிகா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகை. அவளின் பெயரை பச்சை குத்திக்கொண்ட ரசிகர்கள் இங்கே ஏராளம். ஒவ்வொரு ரசிகனும் அவளை தனது கனவு கன்னியாக கொண்டாடிக் கொண்டிருந்தான். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் ரசிகர்களால் அவளது மார்க்கெட் கிடுகிடுவென நாலே வருஷத்தில் உயர்ந்துவிட்டது. அனாமிகா சம்பளமாக எவ்வளவு கேட்டாலும் கொட்டித்தர தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தார்கள். பெளர்ணமி நிலவு போல பளபளப்பாக […]Read More
அத்தியாயம் -15 மருதவள்ளி சடசடவென்று கொட்டி தண்ணீர்த் தொட்டியை நிரப்பியபடி வழிந்து போன நீரைக்கண்டதுமே கண்கள் பளபளக்க நின்றாள். “ஆஹா…சதாசிவம் அண்ணன் பம்பு செட்டுலே தண்ணி விட்டுட்டாங்களா” என்று குதூகலித்தவள் வாகாய் உட்கார்ந்து முகத்தையும் கழுத்தையும் தண்ணீரில் காட்டி கழுவிக்கொண்டாள்.சுற்றிலும் விழியை ஓட்ட யாரையும் காணவில்லை. சற்று சுதந்திரமாகவே கழுத்துக்குக் கீழும் முழங்கால் வரையிலுமாக தன்னை சுத்தப் படுத்திக்கொண்டாள் தண்ணீர்த் தொட்டியின் விளிம்பிலேயே கண்ணை மூடிக் கொண்டு உட்காரவும் செய்தாள். காலைமுதல் கதிரறுத்த அலுப்பு தண்ணீர் தந்த […]Read More
அத்தியாயம் – 15 வீட்டில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் இயந்திரங்கள் போல் நடமாடினார்கள். ப்ரியாவிற்கு வீட்டில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. ’தந்தையும் தாயும் தன்னுடன் ஏன் சரியாகப் பேசுவதில்லை? தன்னை ஏன் ஆஸ்பிடலில் அனுமதித்தார்கள்? தனக்கு என்ன நடந்தது?’ குழம்பித் தவித்தது அந்த பிஞ்சு மனம். வாரம் ஒன்று ஓடியிருந்தது..பிருந்தா கணவனை வினவினாள்.. “ஏங்க பிரியா ஆஸ்பிடலுல இருந்து வந்து ஒரு வாரம் ஆயிடிச்சு அவளை ஸ்கூலுக்கு அனுப்பணும்” “பிருந்தா இவளை இனிமேல் […]Read More
அத்தியாயம் – 16 காஞ்சனாவை தனியாக சந்தித்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை துளசி தந்தாள். “ நகையை வித்து தயார் பண்ணின ரெண்டு லட்சத்துல ஒண்ணே முக்கால் லட்சம் செலவாயாச்சு. இனி அந்த கபாலி பணம் கேட்டா, எங்கிட்ட இல்லை.” “அதுக்கும் அவனே ஆலோசனை சொல்லுவான்.!” “நான் தப்பான வழில போறேன்னு எனக்கே தெரியுது. ஆனா என் புருஷன் மேல உள்ள சந்தேகம் போக மாட்டேங்குது.” “நீ ஒரு காரியத்துல இறங்கியாச்சு. இனி பின் வாங்கறது […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 15 | பெ. கருணாகரன்
எங்கப் பாட்டன் சொத்து! ஆயுத பூஜைக்குக் குப்பைகளை ஒழிக்க வேண்டும் என்று என் இல்லத்தரசி சொல்லும்போதே ஒரு குறும்புப் புன்னகை என் இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்டது. ‘கண்டிப்பாக… ஆனால் ஒரு சந்தேகம்… குப்பைகளை உண்மையில் நம்மால் ஒழிக்க முடியுமா?’ என்று நான் கேட்ட கேள்வியில், அவரது இதழ்களில் ஒரு புன்னகை. அதற்குக் காரணம்… தொடர்ந்து படித்தால் புரியும். பெரிய அளவில் குப்பைகளை ஒழித்துவிட வேண்டும் என்கிற திட்ட இலக்குடன் போகி, ஆயுதபூஜை என்று குப்பை ஒழிக்க […]Read More
அத்தியாயம் -14 விழா நடந்து முடிந்த சந்தோஷமேயில்லாமல் வீடு களையிழந்து கிடந்தது. அவரவரும் மஞ்சுவின் நெருப்புப் பேச்சினால் அவரவர் எண்ணப்போக்கில் உட்கார்ந்திருந்தனர். கோயிலிலேயே மஞ்சுவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி விட்டது சாப்பாட்டு பந்தி ஆரம்பித்ததுமே அலமேலு களைப்பு மீதூர கோயிலின் ஒருபுறமாயிருந்த அறைக்குள் சென்று படுத்து விட்டாள். பயண அலுப்பும் காலையிலேயே எழுந்ததும் சோர்வைத் தந்தது. காது குத்தலில் வலி தாங்காமல் அழுது ஓய்ந்த சின்னுவையும் அருகில் படுக்க வைத்துக்கொள்ள கண் சொக்கியது. நிலா சாப்பிட அழைக்க வந்தவள் […]Read More
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 14 | பெ. கருணாகரன்
எட்டுக்கு எட்டில் ஏழரை! மேன்ஷன் வாழ்க்கை, பிரமச்சாரிகளின் சொர்க்கம். அதுவும் திருவல்லிக்கேணி மேன்ஷன்கள் கல்யாணமாகாத பிரம்மச்சாரிகளுக்கும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரிகளுக்கும் சொர்க்கம். தங்கிக் கொள்ள குருவிக்கூடு போல் ஓர் அறை. வீட்டுச சாப்பாட்டுச் சுவையுடன் உணவளிக்கும் மெஸ்கள். சைவம் என்றால் காசி வினாயகா. அசைவம் என்றால் நாயர் மெஸ். மாதத்தின் காசு கொழிக்கும் முதல் வாரங்களில் புகாரி. மாதக் கடைசியில் பர்ஸ் இளைக்கும்போது, இருக்கவே இருக்கிறது கையேந்தி பவன்கள். ஒரே வேளையில் ஆயிரம் ரூபாய்க்கும் சாப்பிடலாம். பத்து […]Read More
அத்தியாயம் – 15 மந்திரவாதி கபாலியின் இருப்பிடத்துக்கு துளசியும், காஞ்சனாவும் வந்து விட்டார்கள். துவாரகா முறையாக உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே வந்து நடுவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மாமனார் பத்மநாபன் நீல காரை தவற விட்டார். ரௌடிகளை சமாளித்து துவாரகா திரும்ப, ஜி.பி.எஸ் இணைப்பு துண்டானது. “ மாமா! நடுவுல இடையூறு வந்த காரணமா துளசியை பின் தொடர முடியலை. நீங்க வீடு திரும்புங்க. நானும் வந்திர்றேன்!” அதே நேரம் கபாலியின் பண்ணை வீட்டுக்குள் இருவரும் நுழைந்தார்கள். […]Read More
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
1win Aviator Azerbaijan Onlayn Mərc Oyunları Aviator - குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
- நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது..!
- விஜய் சேதுபதியின் VJS51 –திரைப்படத்தின் தலைப்பு வெளியானது..!
- ‘GOAT’ திரைப்படத்தின் VFX பணிகள் நிறைவு..!
- 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
- திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
- வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!