சுஜாதாவின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ். ஒருபுறம் கதாநாயகனின் உணர்ச்சிப் போராட்டங்கள், மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நாட்டுப்புறப் பாடல்களின் அழகையும் ரசிக்க வைப்பது, வேறொரு புறம், ஜமீன் பங்களாவில் இரவில் எழும் மர்ம சப்தங்கள், அதைத் தொடரும் சினேகலதாவின் கொலை, விசாரணை என்று துப்பறியும் கதைக்கான விறுவிறுப்பு என்று முப்பரிமாணத்தில் விரியும் சுஜாதாவின் எழுத்து இந்த நாவலில். பின்னாளில் இதே தலைப்பில் பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா போன்றவர்கள் நடிக்க திரைப் படமாகவும் வெளிவந்தது. கரையெல்லாம் செண்பகப் பூ […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 9 அன்று முழுவதும் தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்த பங்கஜம், இறுதியில் அந்த முடிவெடுத்தாள். “சாட்சிக்காரன் கால்ல விழறதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்”… இந்த சுந்தரியைப் பழி வாங்க அந்த வள்ளியம்மாவையே பயன் படுத்தினா என்ன?” உள் மனதில் அந்தக் கேள்வி எழுந்ததும், “அவளொண்ணும் இந்த சுந்தரி மாதிரி விவரமில்லாதவள் இல்லை… நீ சொல்றதையெல்லாம் முழுசா நம்பி… உன் வலைல விழறதுக்கு!.. சரியான விவரக்காரி… உன்னையே உனக்கெதிரா திருப்பி விட்டடிப்பா…” உள் மனதே […]Read More
என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்கிற குறிப்புடன் 1956ல் இதை எழுதியிருக்கிறார் லக்ஷ்மி அவர்கள். இப்போதும் படிப்பதற்கு போரடிக்காத இந்தக் கதை இங்கே உங்களுக்கு கேப்ஸ்யூலாக! வீரத்தேவன் கோட்டை – லக்ஷ்மி – அந்த திரைப்படக் குழு […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 8 காலை ஒன்பது மணிக்கே வந்து சுந்தரியின் கடையில் அமர்ந்த பங்கஜத்தின் முகம் வழக்கத்திற்கு மாறாய் சற்று வித்தியாசமாயிருந்தது. “என்ன பங்கஜக்கா இன்னிக்கு மூஞ்சி என்னவோ போலிருக்கு… என்ன ஏதாச்சும் பிரச்சினையா?” “எனக்கு வாழ்க்கைல ஒரே பிரச்சினை என் மருமகள்தான்” என்றாள். “என்னக்கா நீங்க யாரு?… உங்களைக் கண்டு இந்த மொத்த மார்க்கெட்டுமே நடுங்குது… நீங்க போயி அந்தச் சின்னப் பொண்ணுக்கு பயந்திட்டிருக்கீங்க!… “ சுந்தரி சொல்ல, “என் மகன் எனக்கு சப்போர்ட்டா இல்லையே?.. […]Read More
நகைச்சுவை நாவல் என்கிற வார்த்தையை யாராவது சொன்னால் உடனே மனதில் பளிச்சிடும் பெயர் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பதுதான். எழுதப்பட்டு ஆண்டுகள் நிறையக் கடந்துசென்று விட்டாலும் இன்றளவும் புதிதாகப் படிப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும் படிப்பவர்களைப் புன்னகையில் ஆழ்த்தும் இந்த நகைச்சுவைப் புதினத்திற்கு இணை சொல்ல மற்றொன்று இல்லை. வாஷிங்டனில் திருமணம் – சாவி அமெரிக்க கோடீஸ்வரி ராக்பெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், யுனெஸ்கோவில் பணிபுரியும் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கல்லூரித் தோழிகள். மிஸஸ் ராக்பெல்லரின் […]Read More
எட்டாவது விளையாட்டுகள் மறுநாள் மறந்து போன மரபு விளையாட்டுகள் சொல்லியடிப்பேனடி அடிச்சினேன்னா நெத்தியடிதானடி…படிக்காதவன் படப்பாடலில் ரஜினி அம்பிகாவின் நடனத்தை ரசித்துக் கொண்டு இருந்த மாலியின் முன் ரெளத்திரமாய் வந்து நின்றான் வாசு. தடிமாடு மாதிரியிருக்கே உனக்கே இன்னமும் கல்யாணம் ஆகலை அதுக்குள்ளே ஆம்பிளைப் பையன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி அம்மாகிட்டே போட்டு கொடுத்திருக்கே கொழுப்பா உனக்கு வழக்கம்போல சண்டை துவங்கிவிட்டதற்கு ஆதாரமாய் வாசு மாலினியின் முன்பு சிலிர்த்துப் போய் நின்றான். இப்ப என்னடா ஊரிலே […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 7 எப்படியெல்லாமோ வாழ ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளி விடுவதுதான் வாழ்க்கை. கடை வீதியில் பெரிய பூக்கடை வைத்து கிட்டத்தட்ட ஒரு முதலாளியாய் வாழ்ந்து கொண்டிருந்த வள்ளியம்மா யாரோ செய்த சதியால், மார்க்கெட்டிற்கு வெளியே கூடையில் வைத்து கொய்யாப்பழங்களை விற்கும் நிலைக்கு வந்தாள். ஆனாலும், மனம் சோர்ந்து விடாமல் தன்னம்பிக்கையோடு அந்த வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். அவள் மகன் பிரகாஷ்தான் அவ்வப்போது ஆக்ரோஷமாகி, “அந்த […]Read More
ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணு கோபாலன் என்ற பெயரில் ஆன்மீக + சரித்திரக் கதைகளையும் அந்தந்தத் தளங்களுக்கே உரிய நடையில் அமர்க்களமாக எழுதுபவர் அவர். இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென வரும் வீர சாகசங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தை-மகன் […]Read More
ஏழாவது விளையாட்டு இரண்டு மூன்று நாட்களாகவே மாலினியைக் காணவில்லை, எப்போதும் வாசு வாசு என்று தன்னையே சுற்றிக் கொண்டிருப்பவளின் வருகை இல்லை என்றதும் சற்றே வெறுமையை உணர்ந்த வாசு எங்கே போயிருப்பாள் என்று அவளின் வீட்டிற்கே நேராகப் போய் விட்டான். மாலினியின் அறைக்குள் இருந்து வித்தியாசமான ஒலிகள் எழுந்தது. கதவைத் திறந்த போது வியர்க்க விறுவிறுக்கஅவள் ஏதோ ஒரு பயிற்சியில் ஈடுபட்டு இருந்தாள். மாலி என்ன பண்றே ? நேத்து பட்டாசு படம் பார்த்தேன் அதில் நம்ம […]Read More
பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)
பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4) வாழ்க்கையில் சில தருணங்கள் மகிழ்ச்சி என்பதுஎதிர்பாராத இன்ப அதிர்ச்சியின் விளைவாய் கிடைத்தால் அதை விவரிக்க வார்த்தைகள் வராது.ஆனால் மனது படும் இன்பம் அதற்கு இணையாக ஏதுமில்லையென்பதே உண்மை. அதிக பட்சம் நாம் கண்ணீரில் காட்டியிருப்போம் அவ்வளவே. விக்கியும் சூரியையும் மனம் நினைத்து கொண்டே கால்களை பாதையில் பயணிக்க வைக்க, நல்ல நாட்களில் சற்று குரலை உயர்த்தி பேசினாலும் கேட்க நாராசமாய் இருக்கும் அந்த கட்டை குரலில் விக்கி […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்