முப்பதடிப் பள்ளமென்று மூடாமல் விட்டாய் அதனால் தப்படிப் போடும் நானும் தடுமாறி வீழ்ந்தேனே.!! அள்ளி அணைத்திட அன்னையும் அருகில் இல்லை தாவி அனைத்திட தந்தையும் பக்க மில்லை..!! சிந்திடும் கண்ணீர் துடைக்க கைகள் கூட எட்டவில்லை அண்ணாந்து பார்க்க கூட அங்கு சிறு இடமுமில்லை.. !! கருவறையின் இருட்டில் கூட பயமின்றி நானிருந்தேன் ஆனால் இந்தக் காரிருள் எனைப் பயங்கொள்ளச் செய்யுதே..!! விளையாட வந்தயெனக்கு விதியோடு ஏனிந்தப் போராட்டம் மீண்டும் நான் வந்து விட்டால் மீண்டும் நடவாது […]Read More
சோகத்தில் சாயும் போது தோள் தருபவள் கோபத்தில் சாடும் போது தாங்கி கொள்பவள் ஆசையில் ரசிக்கும் போது உருகி மகிழ்பவள் அசதியில் அமரும் போது தலை கோதுபவள் உடல் நிலை குறையும் போது உயிர் துடிப்பவள் மோகத்தில் அனைக்கும் போது துணை வருபவள் முதுமையில் துவளும் போது தாயாய் இருப்பவள் உடலும் உயிருமாய் கலந்து உயிர் தருபவள் மனைவி!Read More
அவனும் நானும் அவனும் நானும் நிலவும் ஒளியும் அவனும் நானும் பார்வையும் மொழியும் அவனும் நானும் எழுத்தும் கவியும் அவனும் நானும் இதழும் முத்தமும் அவனும் நானும் மூச்சும் சுவாசமும் அவனும் நானும் குளிரும் போர்வையும் அவனும் நானும் உறவும் உணர்வும் அவனும் நானும் உடலும் உடையும் அவனும் நானும் துடிப்பும் இதயமும் அவனும் நானும் உயிரும் உயிரும் உயிரின்றி உடலில்லை அவனின்றி நானில்லைRead More
வல்லரசு… நல்லரசு ராணுவ பலமும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளை அடுக்கி வைத்திருக்கும் நாடுமட்டும்…… “வல்லரசு”ஆகாது. கஜானாவில் தங்கமும் வைரமும் , குவித்து வைத்திருக்கும் நாடு மட்டும்…… “வல்லரசு” ஆகாது மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த நாடு..மட்டும்…… “வல்லரசு” ஆகாது….. விளைநிலங்களும் இயற்கை வளங்களும் நிறைந்த நாடுமட்டும்……. “வல்லரசு”ஆகாது. அறிவாளிகளும்.. படைப்பாளிகளும்… நிறைந்த நாடுமட்டும்…… “வல்லரசு ஆகாது”. இவைகளுடன் எந்த நாட்டில்… “அநாதை.. இல்லங்களோ” “முதியோர்.. இல்லங்களோ” இல்லாமல் உள்ளதோ அனைவருக்கும் ஆதரவும்………… அரவணைப்பும்….. […]Read More
வாழ்க்கையில் நடிக்காமல் நடிப்பில் வாழ்ந்தவன் நீ உன்னை நடிகர் திலகம் என்றார்கள் இல்லை நீ நடிகர்களின் உலகம்….! உன் நாக்கில் பட்டு நகர்ந்த போதுதான் தமிழுக்கு தனிச்சுவை கூடியது….! உன் உச்சரிப்பைக் கேட்டுத்தான் தமிழை ஒழுங்காய் பேசக் கற்றுக் கொண்டோம்….! உன் படங்கள் ஓடும் திரையரங்குகள் பள்ளிக் கூடங்களாகவே பார்க்கப்பட்டது….! உன் படங்களை பார்ப்பதற்கு தமிழ் உலகம் குடும்பங்களோடு பயணப்பட்டது….! ஒவ்வொரு குடும்பமும் உன்னை மூத்த மகனாய்த்தான் முன்னிறுத்தியது….! முத்தமிழ் மணக்கும் உன் நடிப்பு கண்டு முக்கிய […]Read More
தன் உயிரின் உயிரை தன் உயிருக்குள் உரு கொடுத்து மசக்கையின் மயக்கத்தில் மனம் மகிழ்ந்து கணவனின் உள்ளங்கையில் – குழந்தையின் உயிரோட்டத்தை உணரச்செய்து உள்ளம் நெகிழ்ந்து துடிப்பில் துவண்டாலும் ஆவலில் ஆசையோடு காத்திருந்து பேரலையாய் வரும் வலியை கடந்து பிரசவக்கடலில் உயிர் முத்தெடுக்கும் பெண்மையின் தாய்மை பெரும் வரம் பெற்ற பேரின்பம்Read More
அருவியாக ஆர்பரித்தது வானம் ஆனால் சிறுதுளிகூட அள்ளமுடியவில்லை, இங்கு வடிகால் வசதி ஏதும் செய்யப்படவில்லை. மழையே !மழையே !வா என்றனர் அதற்கு எந்தவித இடமும் இல்லாமல் அவை கலக்கும் இடத்தில் வீடூகள் ஏரிகள் குளங்கள் இருக்கும் இடத்தில் நாம் !!! மழை பெரும்கண்ணீரை வடிகிறது, அதனால் நாமும் கண்ணீரை வடிகிறோம். மழையே நீ வந்து தங்கஇடமில்லாமல் கோவிலில் உனக்காக இத்தனை பூசைகளா? உனக்கான முதல் வேண்டூதல் வடிகால் வசதி, ஏரிகளில் தூர்வாரல், நீ இப்போது ஆனந்தகண்ணீரில் அள்ளி […]Read More
- வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!
- பொங்கலுக்கு வெளியாகிறது அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’
- கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12-ல் வெளியாகிறது..!
- உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..!
- வரலாற்றில் இன்று ( 20.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 20 திங்கட்கிழமை 2024 )
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
1win Aviator Azerbaijan Onlayn Mərc Oyunları Aviator - குற்றால அருவிகளில் குளிக்க தடை..!