மனிதா நீ – மனிதனாய் இரு – R.M. பிரபு

 மனிதா நீ – மனிதனாய் இரு – R.M. பிரபு

மனிதநேயமே
நீ எங்கே இருக்கிறாய்
மானிடர்கள் இங்கே
மடிந்து கொண்டிருக்கிறார்கள்

மனிதனே
மனிதனை தின்றும் நிலை
வந்து விடுமோ என்று
மனம் பதறுகிறது
சாத்தான் குளம் சம்பவம்
தனி மனித மீறலை தோரித்துக் காட்டுகிறது

அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம்
வலிப்பவனுக்குத் தேவை காரணம்
மதத்துக்காக!
இனத்துக்காக!
நிறத்துக்காக என மடிந்துக்
கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள்

அப்பாவி மக்களின் நிலை
என்று மாறுமோ ?
எத்தனை லட்சியத்தோடும்,
எத்தனை கனவுகளோடும்
தன் குடும்பத்தை விட்டு வெளியே சென்றார்களோ?

கணவரை, பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த தாயின்
ஈரக்குலையின் கதறல்
ஏன் இந்த நீதித்தறையின்
காதுகளில் கேட்கவில்லையோ?
மனிதா நீ
மனிதனாய் இரு.

– R.M. பிரபு

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...