Tags :ம சுவீட்லின்

முக்கிய செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை, மகள் கைது..!!!

புல்வாமா தாக்குதல்:     ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.     கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், […]Read More

நகரில் இன்று

கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சரிடம் செல்போன் பறிப்பு..!!

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     புதுச்சேரியின் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன். இவர் அங்குள்ள கடற்கரையில் இன்று வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் அமைச்சரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.  இதையடுத்து இதுதொடர்பாக ஓதியஞ்சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.  Read More

கைத்தடி குட்டு

தொடர்ந்து ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.05 லட்சம் கோடியை தாண்டியது

   புதுதி​ல்லி: பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 1 1.1 லட்சம் கோடியாக இருந்தது. தொடர்ந்து நான்காவது மாதமாக ஜி.எஸ்.டி வருவாய் ஒரு கோடியை கடந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.    நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரியை அமல்படுத்தியது. பல்வேறு […]Read More

கைத்தடி குட்டு

ஆண்டுக்கு இவர்கள் கொடுக்கும் லஞ்சம் மட்டும் 48,000 கோடியா?

 யாருப்பா நீங்க?   புது தில்லி: போக்குவரத்துக் காவலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஆண்டுக்கு ரூ.48,000 கோடியை லஞ்சமாக அளிக்கிறார்களாம்.    போக்குவரத்து மற்றும் வரித்துறைக்கு அளிக்கும் கட்டணத் தொகைகள் தவிர்த்து, லஞ்சமாக மட்டும் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் கொடுக்கும் பணம் 48 ஆயிரம் கோடி என்பது சேவ்லைஃப் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.   லாப நோக்கற்ற அமைப்பான சேவ்லைஃப் அறக்கட்டளை நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து இருநூறு லாரி ஓட்டுநர்கள் மற்றும் […]Read More

பாப்கார்ன்

3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு:

   இயக்குநர் ஷங்கர்:   இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,    இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன்.    ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை […]Read More

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை:

கடைசிப் பந்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!   12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள்.       ஆனால், பூணம் யாதவின் 19-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தார் அமேலியா கெர். இதனால் கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டு பவுண்டரிகள் அடித்து கடைசிப் பந்தில் […]Read More

பாப்கார்ன்

166 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய ரயில்வே புதிய சாதனை!

   புதுதில்லி: இந்திய ரயில்வே நடப்பு நிதியாண்டில் (2019-20) எந்த விபத்திலும் ஒரு பயணியையும் உயிரிழக்காமல், 166 ஆண்டுகளில் முதல்முறையாக புதிய சாதனை புரிந்துள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி வரையிலான காலத்தில் நிகழ்ந்த எந்த ரயில் விபத்துகளிலும் பயணிகள் உயிரிழப்பு பூஜ்ஜியமாகவே இருந்துள்ளது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.     ரயில்களில் ஏற்பட்ட […]Read More

பாப்கார்ன்

கரும்பு பயிர் செய்ய கருவி வழங்காமல் அலைக்கழிப்பு:

விவசாயிகள் புகார்:    கரும்பு பயிர் செய்ய உரிய நேரத்தில் சொட்டுநீர் பாசன பைப் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்டது.   கரும்பு பயிர் செய்ய உரிய நேரத்தில் சொட்டுநீர் பாசன பைப் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜா பரபரப்பு புகார் எழுப்பினார்.     ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில், நடவடிக்கை […]Read More

கைத்தடி குட்டு

ஜெயலலிதா”வின்’ அரசியல் பயணம்

தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக முதல்வர் ஜெயலலிதா விளங்கினார். 1989 ஆம் ஆண்டு திமுக தலைமையில் ஆட்சி அமைந்த போது அதிமுகவுக்கு தலைமை வகித்த ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.     மாநிலங்களவையில் 1984 முதல் 1989 வரையில், உறுப்பினராக இருந்து நாடாளுமன்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அவருக்கு, சட்டப் பேரவையில் உரையாற்றுவதில் எந்தவித தயக்கமும் ஏற்படவில்லை. அப்போது, 9-வது சட்டப் பேரவை 1989 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்டதுRead More

முக்கிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.     இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.     இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் ரகசிய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டனர்.   அப்போது சங்கம் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் […]Read More