Tags :ஆன்மீக மர்மத் தொடர்

தொடர்

அஷ்ட நாகன் – 1| பெண்ணாகடம் பா. பிரதாப்

நாக சாஸ்திரம் ! நாக சாஸ்திரம் குறித்து நம் புராண! இதிகாசங்கள் பல இடங்களில் வெகுவாக பேசி உள்ளன. நாகங்களில் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களை ‘நாகர்’ மற்றும் ‘நாகினி’ என்று அழைப்பர். ஆண் இச்சாதாரி நாகத்தை ‘நாகர்’ என்றும். பெண் இச்சாதாரி நாகத்தை ‘நாகினி’ என்றும் கூறுவர். நாகங்களை பற்றி உலகம் முழுவதும் பலவிதமான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. இச்சாதாரி நாகங்கள் பாதி மனித உருவம் பாதி பாம்பு வடிவம் கொண்டவர்கள்; பாதாள லோகத்தில் வாழ்பவர்கள்: […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் |16| காலச்சக்கரம் நரசிம்மா

16. புகை வளையத்தினுள் குடும்பம்.! பால்கனியில் இருந்து கீழே பார்த்த நல்லமுத்துவுக்கு, கைகால்கள் போய், இதயம் வாய் வழியாக நழுவி, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விடுமோ என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பியவர், கைத்தடியை எடுத்துக்கொண்டு, சட்டையை அணிந்திராத தனது மார்பை மூடுமாறு ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு கீழே நடந்தார். அவர் பால்கனியில் இருந்து பார்த்தபோது அவர் கண்களுக்குத் தென்பட்டது கடம்பனும் ஸ்ரீவள்ளியும். இவ்வளவு காலங்களுக்குப் பிறகு திடீர் என்று […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 15 | காலச்சக்கரம் நரசிம்மா

15. வண்டவாளம் தண்டவாளத்தில்..! மனிதனின் குழந்தைப் பருவம் ஓடி விளையாடும் பருவம். பறவைகளாகப் பறந்து திரிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் வளைய வரும் வயது. குமார பருவம், இயற்கை உடலில் உண்டாக்கும் மாற்றங்களை வியப்புடன் ஏற்று, விடலை எண்ணங்களுடன், பொழுதைக் கழிக்கும் பருவம். வாலிபப் பருவம், உள்ளத்துக்கு இனிமையை அள்ளித்தரும் தனக்கு உற்ற ஜோடியை தேர்ந்தெடுத்து, கைகோர்த்துக் காதல் பாதையில் பவனி வரும் வயது. அதுவரையில் மலர்கள் இறைக்கப்பட்ட பாதையில் நடந்து வந்த அந்த […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 14| காலச்சக்கரம் நரசிம்மா

14. கிராதக குடும்பம்..! மிதுன் ரெட்டி யின் உயிர், கொடைக்கானல் மலையின் நம்பிக்கை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த போது, சரியாக மயூரியின் ஹோட்டல் நம்பருக்கு போன் வந்தது. அழைத்தவன் குகன்மணி. “மயூரி..! நான் குகன்மணி பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்..! தமிழ் ஆக்டர் மிதுன் ரெட்டியோட போன் நம்பர் எனக்கு அர்ஜெண்டா வேண்டும். கோலாலம்பூர்ல நடக்கிற ஒரு நட்சத்திர இரவு விஷயமா அவர்கிட்டே உடனே பேசணும்..! எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..! ப்ளீஸ்..!” –குகன்மணி கேட்க, மயூரி யோசித்துவிட்டு, […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 13 | காலச்சக்கரம் நரசிம்மா

13. நம்பிக்கை விளிம்பு “என்னைத் தெரியலையாம்மா..! நான்தான் உன் தாத்தா நல்லமுத்துவோட ஆலோசகர்..!” –சஷ்டி சாமி கூற, அவரை குரோதத்துடன் நோக்கினாள், கனிஷ்கா. “ஆலோசகரா..? எடுபிடின்னு தானே தாத்தா சொன்னார் ! உங்க ஜோசியம், ஹேஷ்யம் எல்லாத்தையும் பள்ளங்கில வச்சுக்கங்க..! என்னோட வாழ்க்கையில விளையாடினீங்க, அப்புறம், உங்களை என்னோட ரசிகர் பட்டாளம் தெருவுல நடக்க விடமாட்டாங்க.” –கனிஷ்கா ஆவேசத்துடன் கூற, அவளை அலட்சியம் செய்தார், சஷ்டி சாமி. “அம்மா ! உன் குடும்பத்துக்கு இப்ப சிரம தசை […]Read More

3D பயாஸ்கோப்

சூர்யா – சில சுவாரஸ்ய தகவல்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா…   1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 12 | காலச்சக்கரம் நரசிம்மா

12. அலங்-கோலாகலம் இயக்குனர் விஷ்வாஸ் தனது காரைச் செலுத்திக்கொண்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேறி, கேட் அருகே சற்று நிதானித்து இடப்புறம் பார்த்தான். தொலைவில் கனிஷ்காவின் கருமை நிற BMW விரைந்து கொண்டிருந்தது. ‘கனிஷ்காவுக்குத் தெரியாமல் நிச்சயதாம்பூலத்திற்கு வரவும்’, என்று மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான் மிதுன் ரெட்டி. கனிஷ்காவுக்கு எவ்வளவு பயப்படுகிறான் என்பதை இன்றுதான் விஷ்வாஸ் புரிந்துகொண்டான். விஸ்வாஸு க்கு மிதுனின் மீது அளவு கடந்த பிரியம். ‘விஷ்வாஸ் இயக்கினால் உடனே டேட்ஸ் கொடுக்கிறேன்’ என்று […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 11 | காலச்சக்கரம் நரசிம்மா

11. குகன் மணியின் எச்சரிக்கை பீஜிங்கில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தை குகன்மணி செலுத்திக் கொண்டிருக்கிறான் என்கிற நினைப்பே மயூரிக்கு முள்ளின் மீது நிற்பது போன்று அவஸ்தைப்பட வைத்தது. நிலப்பகுதியில் பறக்கும் போது, திடீர் என்று வெறிபிடித்து ஏதாவது ஓங்கி உயர்ந்த கட்டிடத்தின் மீது மோதிவிடப் போகிறானே என்று பயந்தாள். கடல் நீரின் மீது பறக்கும்போது, விமானத்தை நீரில் மூழ்கடிக்க செய்து விடுவானோ என்று கலவரப்பட்டாள். விமானத்தை அவன் […]Read More

தொடர்

பத்துமலை பந்தம் | 10 | காலச்சக்கரம் நரசிம்மா

10. மூன்றாவது சிலை..! நல்லமுத்து சென்னைக்குப் புறப்பட ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பள்ளங்கி பவனம் காவலாளி ராஜாபாதரிடம் பலமுறை கூறிவிட்டார். “நான் சென்னைக்கு நீண்டகாலம் கழித்துப் போகிறேன். கொஞ்ச நாள் அங்கே தங்கிட்டுத்தான் வருவேன். நான் இல்லாத நேரத்தில் உள்ளே ஒரு ஈ காக்கையைக் கூட நுழைய அனுமதிக்காதே. நான் ஆராதிக்கிற முருகன் சிலையைக்கூட, சென்னைக்கு எடுத்துப் போறேன். அதனால, யாரையும், உள்ளே விடாதே..! குறிப்பா… சஷ்டி சாமி வந்தாக்கூட, நான் சாவியை எடுத்துட்டுப் போய் இருக்கிறதா […]Read More

கைத்தடி குட்டு தொடர்

பத்துமலை பந்தம் | 9 | காலச்சக்கரம் நரசிம்மா

9. மாறாத எண்ணங்கள்..! குகன் மணியின் எஸ்டேட்டை விட்டுக் கார் கிளம்பியதும், ஒருமுறை திரும்பி, பின் கண்ணாடி வழியாக தங்களை வழியனுப்பிய குகன்மணியை பார்த்தாள் மயூரி. அவள் அங்ஙனம் திரும்பிப் பார்க்கப் போவதை எதிர்பார்த்திருந்தவன் போல, குகன்மணி தனது கைகளைக் கட்டிக்கொண்டு, இவர்கள் காரையே வெறித்துக் கொண்டிருந்தான். சட்டென்று, தனது பார்வையை மயூரி திருப்பிக் கொண்டாள். “சம்திங் இஸ் ரியலி ராங் வித் திஸ் கய்..! அவனோட, பார்வை, நடையுடை, பாடி லாங்வேஜ் எதுவுமே சரியில்லை. எரிக்..! […]Read More