சிவக்கொழுந்து தலைமையில் சசிவர்ணத் தேவர் அனுப்பிய நால்வர் தூதுவர் படை ராமநாதபுர அரண்மனையை வந்தடைந்தது. சிவக்கொழுந்து, தான் கொண்டு வந்த ஓலைச் சுருளை அரசர் செல்லமுத்துவிடம் ஒப்படைத்தான். ஓலைச் சுருளில் எழுதப்பட்ட செய்தியைப் பார்த்த செல்லமுத்துவின் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.…
Tag: ஜெயஸ்ரீ அனந்த்
சிவகங்கையின் வீரமங்கை | 15 | ஜெயஸ்ரீ அனந்த்
சிகப்பியும் சலீம் மாலிக்கும் குதிரையில் அதிவேகமாகச் சென்றனர். உப்பூர் அருகே இருவரும் கடற்கரையை ஒட்டியபடி சென்றதும் சிகப்பி குதிரையின் வேகத்தைக் குறைத்தாள். கடல் அன்னை தனது கைகளால் சிப்பிகளையும் முத்துகளையும் கரைதனில் ஒதுக்கிக் கொண்டும், பிறகு அள்ளிக் கொண்டும் சென்றாள். தூரத்தில்…
சிவகங்கையின் வீரமங்கை | 14 | ஜெயஸ்ரீ அனந்த்
சிவிகையிலிருந்து இறங்கிய அரசரை கண்டதும் தேவி அகிலாண்டேஸ்வரி இருகரம் கூப்பி அவரை வரவேற்றாள். தாயாரைக் கண்டதும், இளவரசர் முத்துவடுகநாதரும் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். “எழுந்திரு குழந்தாய். வாருங்கள். அனைவரும் நலமாக உள்ளீர்கள் தானே?” என்றாள். “ஆம் தேவி. தற்பொழுது வரை…
சிவகங்கையின் வீரமங்கை | 13 | ஜெயஸ்ரீ அனந்த்
“பார்த்தால் தெரியாது, பழகினால் தெரியும்.” என்ற சிகப்பி, சலீம் மாலிக்கை கண்களால் எச்சரித்தாள். புரிந்து கொண்ட மாலிக்கும் தனது பேச்சை மாற்றி புத்தி பேதலித்தவன் போல் பிதற்றினான். “ஐம்பது குதிரை… ஐம்பது குதிரை .. ம்ஹா…. ரெண்டு வெள்ளிக் காசு… நீ…
சிவகங்கையின் வீரமங்கை | 12 | ஜெயஸ்ரீ அனந்த்
மயங்கிச் சரிந்த கெளரியை நாச்சியார் தனது மடியில் கிடத்தி, “கெளரி… கெளரி…” என்று கன்னத்தைத் தட்டி கொண்டிருந்த நேரத்தில் அரண்மனை வைத்தியர் அங்கு வந்து கெளரியின் நாடியைப் பிடித்துச் சோதித்தார். “பயம் ஏதும் இல்லை. சற்று பதட்டமாகக் காணப்படுகிறாள். அவ்வளவு தான்.…
சிவகங்கையின் வீரமங்கை | 11 | ஜெயஸ்ரீ அனந்த்
தனித்தனிக் குதிரையில் சுமனும் குயிலியும் ராஜசிம்ம மங்கலத்தை நோக்கிப் பயணித்தனர். கோட்டை வாயில், கொத்தளங்களைத் தாண்டிய இருவரின் குதிரைகளும் ஒரே வேகத்தில் இணைபிரியாமல் சென்று கொண்டிருந்தன. இவர்களின் இந்த நெருக்கமான பயணமானது அவர்களின் இதயத்துள் புரியாத ஓர் மகிழ்ச்சியான அனுபவத்தால் நிரம்பியிருந்தது.…
சிவகங்கையின் வீரமங்கை | 9 | ஜெயஸ்ரீ அனந்த்
அரசர் செல்லமுத்து முதன்மந்திரி பசுபதியுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் மெய்க்காப்பாளன் லிங்கபதி உள்ளே வந்தான். “அரசருக்கு வணக்கம். தங்களைக் காண கீழக்கரையிலிருந்து சீதக்காதி வந்துள்ளார்” என்றான். “நண்பன் சீதக்காதியா..? அவரை உடனே வரச்சொல்” என்று ஆணை பிறப்பித்து விட்டு பசுபதியிடம், “அமைச்சரே……
சிவகங்கையின் வீரமங்கை | 8 | ஜெயஸ்ரீ அனந்த்
ஒரு மதிய பொழுது! பனை ஓலைக்கீற்று வேய்ந்த ஒரு வீட்டின் கூரையைத் தாண்டி புகை கசிந்து கொண்டிருந்தது. புகையின் வாசனையை வைத்தே அது கம்பங்கூழும் கருவாட்டு குழம்பும் என்று கூறிவிடலாம். தூரத்தில் இருவர் இந்தப் புகை கசியும் கூரை வீட்டை நோக்கி…
சிவகங்கையின் வீரமங்கை | 7 | ஜெயஸ்ரீ அனந்த்
இளவரசர் முத்து வடுகநாதரை சுமந்து விரைந்து வந்த குதிரை நடுநிசி இரவில் பனையூர் அருகில் வரும் பொழுது சற்று களைப்படைந்து தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. இளவரசரும் அதை துன்புறுத்த மனமில்லாமல் குதிரையிலிருந்து இறங்கி அதனை மெதுவாக நடத்தி கொண்டு சென்றார்…
சிவகங்கையின் வீரமங்கை | 6 | ஜெயஸ்ரீ அனந்த்
குவிரனை தேடிக் கொண்டு சென்ற வீரர்கள் சிவக்கொழுந்து காட்டிய கருவேல மரக் காட்டினை அடைந்தனர். “வீரர்களே, இவ்விடத்தைச் சோதனை செய்யுங்கள் ” என்ற சிவக்கொழுந்தின் சொல்லிற்கு வீரர்கள் ஒருவருக்குள் ஒருவர் தங்களுக்குள் பார்த்து பரிகசித்து கொண்டனர். ‘ஏது.. இந்த அடர்ந்த கருவேலங்காட்டிலா…
