சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 10ம் வகுப்பு மாணவர்கள்…!!

   தேஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள், 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று, மரத்தில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

   அசாம் மாநிலத்தின் சக்லா கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த பிப்.,28ம் தேதி, மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இது தொடர்பாக கோஹ்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவன், தேர்வு எழுதிய பின்னர் தன் வீட்டில் விருந்து வைத்திருப்பதாக கூறியுள்ளான்.


    இதற்காக வந்திருந்த மற்ற மாணவர்கள் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அருகில் இருந்த காட்டில் உள்ள மரத்தில் தொங்கவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிறுமியின் சடலம் மறுநாள் (பிப்.,29) காலையில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகே உண்மைநிலை தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!