தோனியின் மாஸ் என்ட்ரி;

சேப்பாக்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்…!!!

 சென்னை: ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க, பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் தோனி இறங்கிய போது, அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


     இந்திய அணி ‘சீனியர்’ தோனி, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின் எவ்வித கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. வரும் ஐ.பி.எஸ்., தொடரின் 13வது சீசனில் சென்னை அணி கேப்டனாக களமிறங்குகிறார்.

    இதற்காக பயிற்சியில் ஈடுபட தோனி, சென்னை வந்தார். வழக்கம் போல் பஸ்சின் கடைசி வரிசை ‘கார்னர்’ சீட்டில் அமர்ந்து மைதானம் வந்தார். சாலையில் ரசிகர்கள் தோனியை பின்தொடர்ந்து பைக்குகளில் வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் களமிறங்கினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!