முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்” – மம்தா அறிவிப்பு

மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தலில் நாங்​கள் தோல்வி அடைய​வில்​லை. எங்​கள் வெற்றி களவாடப்​பட்​டது. நான் ராஜி​னாமா செய்​யப் போவ​தில்லை என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார்.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களைக் கைப்​பற்றி பாஜக அமோக வெற்றி பெற்​றுள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி 80 இடங்​களைக் கைப்​பற்​றியது. இந்​நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சித் தலை​வ​ரான மம்தா பானர்ஜி நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​து கூறிய​தாவது: நான் முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்​யப்​போவ​தில்​லை. நாங்​கள் இந்​தத் தேர்​தலில் தோற்​க​வில்​லை; மாறாக எங்​கள் வெற்றி களவாடப்​பட்​டது. நான் ராஜி​னாமா செய்ய மாட்​டேன். அடுத்​தக்​கட்ட நகர்வு குறித்து எனது கட்​சி​யினர் ஒன்​றுகூடி ஒரு​மித்த முடிவை எட்​டு​வோம்.

தேர்​தலில் பெரியள​வில் வன்​முறை நடந்​துள்​ளது. காவல்​துறை, தேர்​தல் ஆணை​யம் என அமைப்பு ரீதியி​லான தாக்​குதல்​கள் நடந்​துள்​ளன. இந்​தத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் தார்​மிக வெற்றி பெற்​றிருக்​கிறது. எங்​களு​டைய போட்டி பாஜக​வுக்கு எதி​ரானது அல்ல. அது தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதி​ரானது. இந்​தத் தேர்​தலில் அவர்​கள் நியாய​மான வெற்​றியைப் பெற்​றிருப்​பார்​கள் என்​றால் நான் புலம்​பி​யிருக்க மாட்​டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!