தை பொன்மகளே வருக !

 தை பொன்மகளே வருக !
மார்கழி திங்களுக்கு
மங்களம் பாடி 
நித்திரை நீங்கி
முத்திரை பதிக்க
தை பொன்மகள் 
மகிழ்வோடு பனித்துளியின் 
வாழ்த்துகளுடன் வருகிறாள்!

தை பொன்மகளை 
உடல் உள்ளம் பொங்க
உழவர்கள் மட்டுமா
பொங்கல் பானை  வைத்து  
களிப்புடன் வரவேற்கிறான்!

வீசும் தென்றல்காற்று  
விரிந்த பனிமலர்கள்
வர்ணக்கொம்பு மாடுகள் 
விளைந்த நெற்கதிர்கள் 
இனிக்கும் கரும்புத்தோகைகள்   
மணக்கும் மஞ்சள்குலைகள்  
மகிழ்வோடு வரவேற்கும் பொழுது… 

அன்பு உள்ளங்களே
கள்ளமில்லாமல் துள்ளி 
விளையாடும் குழந்தைகள்போல்
உழவரோடு உள்ளம் கலந்து 
தை பொன்மகளை நாமும்
வணங்கி வரவேற்போம்!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...