“வேட்டையன்” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி..!

 “வேட்டையன்” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’.

அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் நாளை (அக்.10) வெளியாகிறது. வேட்டையன் திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோரை ஒரே படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், டிக்கெட் புக்கிங்கிலும் சாதனை படைத்து வருகிறது. இந்தியா முழுவதும் வேட்டையன் திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளை சேர்த்து 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 3007 காட்சிகளுக்கு 6.33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...