பாடலாசிரியராக அறிமுகமாகும் நடிகர் தனுஷின் மகன்..!

 பாடலாசிரியராக அறிமுகமாகும் நடிகர் தனுஷின் மகன்..!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 3வது திரைப்படமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் அவரது மகன் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார்.

பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்தார். ராயன் திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றிப்படம் ஆனது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ராயன் படத்தைத் தொடர்ந்து, தனுஷின் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம்  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில், தனுஷின் சகோதரி மகன் நாயகனாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன், பவிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் இளம் தலைமுறையின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இதன் முதல் பாடலான, கோல்டன் ஸ்பேரோ பாடல் ஆக. 30-ம் தேதி வெளியாகிறது. இப்பாடலை அறிவு எழுத, சுப்புலட்சுமி, ஜி.வி.பிரகாஷ், தனுஷ், அறிவு உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன் மகனை தனுஷ் நடிகராக அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தகவல் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...