நான் தொலைகிறேன்

 நான் தொலைகிறேன்
நீ ,,,நிலவு தான்
தேய்பிறை என்றாலும்
வளர்பிறை என்றாலும்
நீ நிலவுதான்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு கவிதை
உன்னிடம் பிறக்கும்
நான் தோற்று கொண்டேன் ..
சிந்திய மயிலிறகு கண்டு
 சிரிக்கும் மழலையென
உன் புன்னகை கண்டு
கை கொட்டுகிறேன்
கைப்பிடிக்க ,,,,
உன் முகம் காட்டும்
வேதியல் பறிமாற்றத்தில்
விழியின் ரச பூச்சுகள்  
மனதிற்கு நக பூச்சாகிறது
உன் பிம்பம் சுமந்தது …
விரல்களின் இடையில்
பாயும் தென்றல் ,
வீணையின் கம்பியென  
ராகம் இசைக்க
கலைமகள் உன் விரல் ஆனாள்
அழகு என்னும்  அகராதியை
ஆண்டவன் தவறவிட
அகராதி  உன்னில்
தொலைந்தது ,,
நான் தொலைகிறேன்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...