விளையாட்டு செய்திகள்

 விளையாட்டு செய்திகள்
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் நடக்கும் இடங்களை மாற்றி பிசிசிஐ அறிவித்துள்ளது.
டிசம்பர் 6ம் தேதி மும்பையில் முதல் டி20 போட்டியும், டிசம்பர் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் 2வது போட்டியும், டிசம்பர் 11ம் தேதி ஹைதராபாத்தில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டியும் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம், மற்றும் டாக்டர் அம்பேத்கரின் மகாபரி நிர்வான் தினமும் வருவதால் போட்டிக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மும்பை போலீஸார் பிசிசிஐ அமைப்பிடம் தெரிவித்துவிட்டனர்.
தற்போது போட்டியை பிசிசிஐ மாற்றியது: இதன்படி மும்பையில் நடக்கும் முதலாவது டி20 போட்டி மூன்றாவது போட்டியாகவும், ஹைதராபாத்தில் நடக்கும் 3வது போட்டி முதல் போட்டியாகவும் மாற்றப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...